.

Pages

Saturday, April 20, 2019

மழையில் நனைந்த அதிராம்பட்டினம் ரயில் நிலையம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.20
பட்டுக்கோட்டை ~ திருவாரூர் அகல ரயில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கடந்த மார்ச் 29ந் தேதி அதிவேக சோதனை ஓட்டம் நடந்து முடிந்தது. இதையடுத்து இந்த வழித்தடத்தில் சென்னைக்கு விரைவு ரயில் போக்குவரத்து சேவையை உடனடியாக தொடங்க வேண்டுமென அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி ரயில் பயணிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கடந்த மார்ச் 15ந் தேதியை இலக்காகக்கொண்டு, அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நடை மேடைகள் தளம், தடுப்புச் சுவர், கழிப்பறை போன்ற கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. கட்டுமானப்பகுதியின் சிமெண்ட் தளங்கள் போதுமான தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டன. இதனால் ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பகலில் கடும் வெப்பம் நிலவி வந்தது. நேற்று வெள்ளிக்கிழமை மற்றும் இன்று சனிக்கிழமை அதிகாலை லேசான இடியுடன் கூடிய மழை பெய்ததால், அதிராம்பட்டினம் ரயில் நிலையம் தூய்மையாகவும், சிமெண்ட் தூசுகளின்றி பள்ளிச்சென காட்சியளித்து வருகிறது.

மழையில் நனைந்த அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் அதிகாலை வாக்கிங் பொழுதில் எடுக்கப்பட்ட ரம்மியமான படங்கள்...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.