.

Pages

Tuesday, April 23, 2019

அதிராம்பட்டினத்தின் கோடைவாச குளங்கள் (படங்கள்)

அய்யனார் கோயில் குளம்
அதிராம்பட்டினம், ஏப்.23
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்வரை நம் அதிராம்பட்டினம் குடிநீர் கிணறுகள் மட்டும் நம்பியிருந்த போது கூடுதலாக மண்ணப்பன் குளமும் பிரத்தியேகமாக அதிரை பகுதி மக்களின் குடிநீர் தேவைகளை நிறைவேற்றி வந்தது. அதேபோல் ஊரெங்கும் நிறைந்திருந்த குளங்கள் மட்டுமே குளியலுக்கு கதி. இன்று கிணறுகள் இல்லவே இல்லை குளங்கள் இருக்கு ஆனால் அதில் தண்ணீர் இல்லை என்ற நிலையே என்றபோதும் நமதூரிலும் நம்மை சூழ்ந்துள்ள கிராமங்களிலும் உள்ள வெகுசில குளங்கள் மட்டும் இன்னும் இந்த கடும் கோடையிலும் பயன் தந்து வருகின்றன.

கஜா புயலால் நமதூர் பேரழிவுகளை சந்தித்து தண்ணீர் இன்றியும் மின்சாரம் இன்றியும் சீரழிந்து கிடந்தபோது பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தினமும் குளிக்கக் கை கொடுத்தவை இக்குளங்களே. தற்போதும் தேர்தலுக்கு சுமார் 2 தினங்களுக்கு முன் கஜா புயல் துன்ப நாட்களை "களா" செய்தது போலிருந்த மின்சாரமில்லாத அந்த 2 நாட்களிலும் கை கொடுத்தவை இக்குளங்களே.

பொதுவாக கோடை காலங்களில் கோடைவாச ஸ்தலங்களை நோக்கி படையெடுப்போம் அதேபோல் குளக்குளியல் பிரியர்களும் பொதுவானவர்களும் கீழ்க்காணும் நீர்நிலைகளுக்குச் சென்று உடல் சூட்டை தணித்து வருகின்றனர் என்றால் அது மிகையாகாது, இதில் முதலிடத்தில் உள்ளது கடற்கரை தெருவிலுள்ள "வெட்டிக்குளம்"

அதிரையின் பெரும்பான்மையான குளங்கள் காய்ந்திருக்க அருமையான முறையில் மராமத்து செய்யப்பட்டுள்ள வெட்டிக்குளம் ரசித்துக் குளிக்க ஏற்ற நன்நீரை கொண்டுள்ளதுடன் கரை சுவர்களில் இஸ்லாம் வழியுறுத்தும் சுத்தம் பற்றியும் சகலருக்கும் அழகுற எடுத்துரைக்கின்றது.

இதற்கடுத்து வற்றிப் போய்விட்ட சினன ஏரியின் நடுவே குளம் வெட்டி நீரை தேக்கி வைத்துள்ளனர். தெளிவாகவுள்ள இந்த ஏரி குளத்தின் கரைகள் மட்டுமே கொஞ்சம் வழுக்கக்கூடியவை மற்றபடி ஆனந்தக்குளியலுக்கு அற்புதமானது.

அணையப் போகின்ற விளக்கை நினைவூட்டும் செடியன் குளம், அதில் சிறிதளவே எஞ்சியுள்ள நீரிலும் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் குளித்து வருகின்றனர் என்றாலும் இந்நிலையில் அது குளியலுக்கு ஏற்ற குளமல்ல.

ஏரிப்புறக்கரை கிராமத்தை சுற்றியும் குஞ்சி குளம், உடையங்குளம், அய்யனார் கோயில் குளம், வழுதியம்மன் கோயில் குளம், பள்ளக்குளம், வென்னீர் குட்டை போன்றவையும் குளியலுக்கு பயன்பட்டு வருகின்றன. இத்துடன் சின்ன பூச்செறி, பெரிய பூச்செரி என்ற குளியல் தவிர்த்த வேறுபல பொதுபயன்பாட்டுக் குளங்களும் நிறைந்த நீருடன் உள்ளன. இன்னும் சில குளங்களும் உள்ளனவாம் நம்மால் தான் அடிக்கிற வெயிலில் அலைய முடியவில்லை.

மேலும் ECR சாலை அமைந்துள்ள ஊர்களான சின்ன ஆவுடையார் கோயில், புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம் ஆகிய ஊர்களிலும் குளங்களில் தண்ணீர் நிறைந்து காணப்படுவதுடம் குளியலுக்கும் பயன்பட்டு வருகின்றன.

நாம் பார்த்த வகையில், கடற்கரை தெரு வெட்டிக்குளம் துவங்கி மல்லிப்பட்டினம் வரை கடற்கரையை ஒட்டியுள்ள குளங்களில் மட்டும் நீர் நிறைந்து காணப்படுவதன் காரணம் என்னவாக இருக்கும்?  மக்களின் பொறுப்புணர்வா? கடற்கரையை ஒட்டியுள்ள அந்த மண்ணின் தன்மையா?

அதேபோல் நமது ஊருக்குள் குளங்கள் வறண்டு போக காரணமென்ன? மக்களின் அலட்சியமா? மின் மோட்டார்கள் வைத்து சரமாரியாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதாலா? அல்லது அரசின் புறக்கணிப்பா?

காரணம் எதுவாக இருந்தாலும் சரியே, இருக்கும் குளங்கள் கோடைவாசக் குளங்களாக திகழ்கின்றன என்பதில் மாற்றமில்லை.

களத்தொகுப்பு
அதிரை அமீன்
வெட்டிக்குளத்திற்கு குளிக்க வரும் இளைஞர் ஜமாஅத்
வெட்டிக்குளம்

வெட்டிக்குளம்

வெட்டிக்குளம் அறிவிப்பு பலகை

வெட்டிக்குளம் அறிவிப்பு பலகை
செடியங் குளம்
  
செடியங்குளம்

செடியங்குளம்

வென்னீர் குட்டை

பெரிய பூச்செறி

சின்ன பூச்செறி

சின்ன பூச்செறி

குஞ்சி குளம்

உடையங்குளம்

வழுதி அம்மாள் கோவில் குளம்

சின்ன ஏரி

சின்ன ஏரி 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.