.

Pages

Friday, April 19, 2019

பட்டுக்கோட்டையில் அதிரை பிரமுகரின் புதிய உதயம் 'பெஸ்ட் ஆப்டிக்கல்ஸ்' (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.19
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எம்.இசட். பஷீர் அகமது. சமூக ஆர்வலரான இவர் பட்டுக்கோட்டை வடசேரி ரோட்டில், (பெரிய பள்ளிவாசல் அருகில்) 'பெஸ்ட் ஆப்டிக்கல்ஸ்' கண் பராமரிப்பு மையத்தை புதிதாக தொடங்கி உள்ளார். இதன் தொடக்க விழா நிகழ்ச்சி கடந்த (ஏப்.14) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பட்டுக்கோட்டை வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.ஆர் ராமானுஜம் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை பிரபல கண் மருத்துவர் டாக்டர் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை பிரபல கண் மருத்துவர் டாக்டர் எஸ். கோபிநாத் கண் பராமரிப்பு மையத்தை திறந்து வைத்தார். கண் மருத்துவர் எல். ஸ்ரீனிவாசன், தொழில்அதிபர் டி.முகமது நிஜாமுதீன் மற்றும் வர்த்தகர்கள், உறவினர்கள், நண்பர்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

முன்னதாக நிறுவன உரிமையாளர் எம்.இசட். பஷீர் அகமது மற்றும் 'பெஸ்ட் ஆப்டிக்கல்ஸ்' கண் பராமரிப்பு மையம் எஸ். ஜெய்லானி, கோபிகா ஆகியோர் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தனர்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் எம்.இசட். பஷீர் அகமது கூறியது;
எங்களது கண் பாதுகாப்பு மையத்தில் சிறப்பு கண் மருத்துவர் மூலம் கண் பாதுகாத்தல் குறித்து பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கப்படும்.  கம்ப்யூட்டர் மூலம் கண் மருத்துவ பரிசோதனை, காண்டாக்ட் லென்ஸ் பொருத்தல் போன்ற வசதி உண்டு. மேலும், கண் மருத்துவரின் பரிந்துரையின் பேரில், அதி நவீன உலகத் தர வாய்ந்த ரேபான், போஸ் & லாம்ப், போஸ், பூமா, ஹோயா, பாஸ்ட் ட்ராக், பிரெஸ் லுக், நைக், லெவிஸ், டாக்லி உள்ளிட்ட நிறுவனத் தயாரிப்பு கண்ணாடிகள் மலிவான விலையில் மொத்தமாகவும், சில்லறையாகவும் குறித்த நேரத்தில் டெலிவரி செய்யப்படும். பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பேராவூரணி, ஒரத்தநாடு மற்றும் சுற்றுப்புறப்பகுதி பொதுமக்கள் எங்களது நிறுவனம் வளர்ச்சியடைய தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு
04373 254066 / / 8300025611 
9842071066 / 9442991155
 










No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.