அதிரையில் இயற்கையான முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழ விற்பனைக்கு புகழ்பெற்றவர் "ஊசியப்பா" என்கிற அப்துல் மஜீது. குடும்பப் பாரம்பரியமாக இவர் மாம்பழம், தேங்காய், புளி, பலா, வாழை போன்றவற்றை விற்பனை செய்து வருகிறார், இப்படியான பழ மரங்களை குத்தகைக்கு எடுத்து அறுவடை செய்து விற்பது இவரது தந்தை முஹமது ஸாலிஹூ அவர்களிடமிருந்தே இவர் கற்றுக் கொண்டார் என்பதுடன் தந்தையின் "ஊசியப்பா" என்ற பட்டப்பெயரே இவருக்கும் நிலைத்துவிட்டது.
தற்போது பிலால் நகரில் (செடியன் குளம் பெரிய கரை அருகில்) சீசனுக்கு ஏற்றார்போல் கிடைக்கும் பழங்களான எலுமிச்சை, பலா, வாழை, தேங்காய், தர்பூஸ் போன்றவற்றுடன் சில வகை காய்கறிகளையும் விற்று வருகின்றார். விரைவில் நல்ல மாம்பழங்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாகவும் இவற்றை வழமைபோல் இயற்கையான முறையிலேயே பழுக்க வைத்து விற்பேன் எனவும் தெரிவித்தார், இவருடைய மாம்பழங்களுக்கு அதிரை முழுவதும் வாடிக்கையாளர்கள் உள்ளதுடன் இவரை தேடிவந்தும் வாங்கிச் செல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
கஜா புயலால் நமது சுற்று மாவட்டங்களில் அனைத்துவகை மரங்களும் பெருமளவில் அழிந்து போயுள்ள நிலையிலும் எலுமிச்சை, பலா, தேங்காய் போன்றவற்றை சில்லரையாகவும், மொத்தமாகவும் விற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
Staff Selection Commission (SSC) is soon going to announce the Notification for SSC MTS 2019 Recruitment . SSC announced the release date of SSC MTS Notification 2019 to be on 22nd April 2019.
ReplyDelete