தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின்
சார்பில் ஏழை, எளிய, நலிவடைந்த உள்ளூர் பொதுமக்கள் பயனுறும் வகையில் வட்டியில்லா நகைக் கடன் வழங்கும் திட்டம், ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள் ஆகியோருக்கான பென்ஷன் வழங்கும் திட்டம், ஏழைக்குமர்களுக்கான திருமண நிதி உதவி வழங்கும் திட்டம், ஏழை மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை, சிறுதொழில் தொடங்க வட்டியில்லாத கடனுதவி, மருத்துவ உதவி, சிறுவர்களுக்கு ஹத்னா செய்தல், ஆம்புலன்ஸ் வசதி, ஆண்டுதோறும் ஃபித்ரா அரிசி விநியோகம், தையல் இயந்திரங்கள், கிரைண்டர் வழங்குதல் உள்ளிட்ட சேவைத் திட்டப் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. மேலும் சுய தொழில் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கு தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஜனாஸா (இறந்த உடல்) நல்லடக்கத்திற்கு பயன்படுத்தும் தரமான மரக்கட்டைகள் குறைந்த கட்டணத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
இத்திட்டங்கள் யாவும் வருடந்தோறும் கிடைக்கப்பெரும் ஜக்காத் நிதி உதவியைக்கொண்டும், கூட்டுகுர்பானி திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதி மற்றும் நன்கொடைகளைக்கொண்டு நடைபெற்று வருகின்றன. ஆகவே, நல்லுள்ளம் படைத்த அன்புச் சகோதரர்கள் அனைவரும் கடந்த வருடங்களைப்போல் இவ்வருட புனிதமிகு ரமலான் மாதத்தில் தங்களுடைய ஜக்காத் மற்றும் பித்ரா நிதியை அதிரை பைத்துல்மாலுக்கு அதிகமதிகம் வழங்க வேண்டும் என அதிரை பைத்துல்மால் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
இதுபற்றி பேராசிரியர் ஹாஜி எம்.ஏ முகமது அப்துல் காதர் அவர்கள் வைக்கும் கனிவான வேண்டுகோள் (இணைப்பில் வீடியோ)
Assalamu alaikum en peyar haja shareef Namathur baithulmal oru sirantha pothu sevai maiyam en bathil nan perumitham adaigiren athe velaiyil sila samayam vatti illa kadanai peralam endra nambikaiyudan varum solar niraagarika padugirargal intha nilaiyinai nirvagam matrida vendum vassalam
ReplyDelete