.

Pages

Sunday, November 8, 2020

ஏரிப்புறக்கரை ஊராட்சியில் எஸ்டிபிஐ கட்சியினர் 3 இடங்களில் கொடி ஏற்றம்!

அதிராம்பட்டினம், நவ.08
எஸ்டிபிஐ கட்சி சார்பில், ஏரிப்புறக்கரை ஊராட்சியில் 3 இடங்களில் கொடி ஏற்ற நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

நிகழ்வுக்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எஸ். அகமது அஸ்லம் தலைமை வகித்தார். அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.ஜெ சாகுல் ஹமீது, தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் முகமது ரஹீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் இணைச் செயலாளர் சி. அகமது வரவேற்றுப் பேசினார்.

இந்நிகழ்வில், அக்கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். இதில், ஏரிப்புறக்கரை ஊராட்சி கண்டியன் கொல்லை, காந்தி நகர், மஸ்னி நகர் ஆகிய 3 இடங்களில் கட்சி கொடி ஏற்றி வைக்கப்பட்டு, கொள்கை முழக்கமிடப்பட்டது.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.