உலக நீரிழிவு நோய் தினத்தையொட்டி அதிராம்பட்டினம் அரிமா சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை இணைந்து நீரிழிவு நோய் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் இலவச நீரிழிவு நோய் கண்டறியும் முகாம் ஷிஃபா மருத்துவமனை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
முகாமுக்கு, அதிராம்பட்டினம் அரிமா சங்கத் தலைவர் எம்.அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். செயலாளர் எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமை, அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் முகமது இம்தியாஸ் தொடங்கி வைத்தார். முகாமில், சென்னை பிரபல நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் முபாரக் பங்கேற்று, நீரிழிவு நோய் குறித்தும், நோய் வராமல் தடுத்துக் கொள்வது, நோய் வந்த பின்னர் பின்பற்ற வேண்டிய உணவு மற்றும் பழக்க வழக்க முறைகள் ஆகியவை குறித்து கருத்துரை வழங்கினார்.
முகாமில் 50-க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக நீரிழிவு நோய் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதில், அதிராம்பட்டினம் அரிமா சங்க நிர்வாகிகள் பேராசிரியர் மேஜர் எஸ்.பி.கணபதி, எஸ்.ஏ அப்துல் ஹமீது, ஆர். செல்வராஜ், எம்.முகமது அபூபக்கர், எம்.கே.எம் முகமது அபூபக்கர், பி.உமா சங்கர், ஏ.வி.எம் வரிசை முகமது, ஏ.முகமது ஆரிப், எச்.அப்துல் ரெஜாக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.