.

Pages

Tuesday, November 10, 2020

மாவட்ட ஆட்சியருடன் மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு (படங்கள்)

தஞ்சாவூர் நவ.10
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவை, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்டத் தலைவர் ஏ.பஹாத் முகமது தலைமையில் நேரில் சந்தித்து, மாற்றுத் திறனாளிகளின் நலன் சார்ந்த கோரிக்கைகள் முன்வைத்தனர். 

அப்போது, மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை குறைந்த பட்சம் ரூ. 3 ஆயிரமும் கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ 5 ஆயிரமும் வழங்க வேண்டும், தனியார்துறை வேலைவாய்ப்புகளில் 5 சதவித வேலைவாய்ப்பு இடங்களை வழங்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவ.17 ந் தேதி நடைபெற இருக்கும் மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் குறித்தும், அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தி அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், காரோனா ஊரடங்கில்,  மாற்றுத்திறனாளிகளிடமிருந்து லைப் சான்றிதழ் கோருவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகத்தில் ஏற்படும் அச்சுறுத்தல், இடையூறுகள், பாதிப்புகள் பற்றி புகார் அளித்தால் அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்நிகழ்வில், சேதுபாவா சத்திரம் ஒன்றியச்செயலாளர் ஜலீல் முகைதீன், பேராவூரணி ஒன்றியத் தலைவர் வின்சென்ட் ஜெயராஜ், ஒன்றியச் செயலாளர் சுதாகர், திருவோணம் ஒன்றியத் தலைவர் செந்தில், ஒன்றியச்செயலாளர் திருமேனி, மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் சந்திர பிரகாஷ், ஒரத்தநாடு ஒன்றியத் தலைவர் பிரபாகரன், அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் ஜம்ஜம் அகமது அஷ்ரப் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.