.

Pages

Tuesday, November 24, 2020

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

அதிரை நியூஸ்: நவ. 24
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (24.11.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பட்டுக்கோட்டை வட்டம், தம்பிக்கோட்டை வடகாடு பகுதியில் நசுவினியாறு மற்றும் பாட்டுவனாச்சி ஆறு முகத்துவாரம் பகுதியில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் நேரில் சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் முகத்துவாரம் பகுதியில் எவ்வித தடையுமின்றி தண்ணீர் சென்றிடும் வகையில் பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார். 

பின்னர், ராஜாமடம் அக்னியாறு முகத்துவாரத்தில் ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மணல் திட்டுகளை உடனடியாக அகற்றிடுமாறு அறிவுறுத்தினார். அதன் பின்னர், ராஜாமடம் கீழத்தோட்டம் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அங்கு பொதுமக்களை தங்க வைப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா? ஏன மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் ஆய்வு மேற்கொண்டார்.

இவ்வாய்வுகளின்போது பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர், பொதுப்பணித்துறை கல்லணைகால்வாய் கோட்ட செயற் பொறியாளர் முருகேசன், அக்னியாறு கோட்ட செயற்பொறியாளர் திருமதி.கனிமொழி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.