.

Pages

Tuesday, November 17, 2020

உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!

பட்டுக்கோட்டை, நவ.17
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் ஏ.ஆனந்த கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஏ.பஹாத் முகமது, சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் எச்.ஜலீல் முகைதீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

தெலங்கானா, பாண்டிச்சேரி மாநிலங்களைப் போல் மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகையாக குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுற்றவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும், தனியார் துறை வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், அரசு துறைகளில் பின்னடைவு காலிப் பணியிடங்களை கண்டறிந்து, 2013 உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 3 மாதங்களில் வெளிப்படையாக அறிவித்து உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்களில் கருப்புத் துணி கட்டி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்பாட்டத்தில், பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் கே. கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய துணைத்தலைவர் என்.ஜெயபாலன்  ஒன்றிய துணைச் செயலாளர் டி. கோபி செல்வம், ஒன்றிய பொருளாளர் கே. கோட்டை துரை, அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் ஜம்ஜம் அகமது அஷ்ரப், கொண்டிக்குளம் ராமமூர்த்தி உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர். நிறைவில், கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வாட்டாட்சியர் அலுவலரிடம் வழங்கினர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.