.

Pages

Saturday, November 14, 2020

தீபவொளித் தீர்ப்புகள்!

தீபந் தருமந்தத் தேனைமிஞ்சும் இன்பமுங்
கோபமூட்டுந் தீததை கொளுத்தவே - சாபம்
விடுவதில் சார்ந்தவர் வீரரன்று! சாத்தான்
தொடுமனத்தைத் தட்டித் துடை!

துடைத்துவிடும் மத்தாப்புத் தொட்ட மகிழ்வை
விடைகொடு 'தாம்நாம்' விதைப்பைத் - தடையற்று
விரவிக் கலந்தால் விறைவாய் உயர்வில்
துறவியின் கோலம் துற

துறவு தெளியுந் துணையி னுறவில்
அறமும் மலரும் அகத்துள் - புறத்துப்
புதுமை மெருகில் புகழ்வெடிக்கும்  சுற்றும்
அதுதானே மத்தாப்பாம் அன்பு

அன்பு மொழியிலே ஆட்சி செலுத்திடின்
துன்பஞ் சுடாது தொடர்பதில் - இன்பம்
இருப்பாகும் எல்லோ ரிதயமும் ஒன்றில்
உருவான வுண்மை யுணர்ந்து!

ஷேக் அப்துல்லாஹ் அ.
அதிராம்பட்டினம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.