.

Pages

Wednesday, November 25, 2020

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் தேசிய பச்சிளம் குழந்தைகள் வார விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ. 25
ஒவ்வோா் ஆண்டும் நவம்பா் மாதம் மூன்றாம் வாரத்தில் தேசிய பச்சிளம் குழந்தைகள் வார விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சாா்பில், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் வழிகாட்டுதலின் படி, வாரவிழா அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திகேயன் தலைமையில் நடந்த நிகழ்வுகளில், பிரசவித்த தாய்மார்களுக்கு பச்சிளம் குழந்தைகளை நல்ல ஆரோக்கியத்துடன் பராமரிக்கும் முறை, குழந்தை பெற்றெடுக்கும் தாய்மாா்களுக்கு சுகாதார அறிவுரைகள், தாய்ப்பாலின் அவசியம் பற்றி விளக்கிக்கூறப்பட்டது. தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டன. பிறந்த குழந்தைகளுக்கு அம்மா குழந்தை நல பரிசுப்பெட்டகங்கள் வழங்கப்பட்டன. 

இதில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அணைத்து மருத்துவப் பணியாளர்கள் பங்கேற்று, பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு முறை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.