.

Pages

Wednesday, November 25, 2020

மல்லிபட்டினம் கடலோரப் பகுதியில் புயல் முன்னெச்சரிக்கை கண்காணிப்பு அலுவலர், ஆட்சியர் ஆய்வு!

மல்லிபட்டினம், நவ.25-
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிபட்டினம் கடலோரப் பகுதியில், புயல் முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்கும் விதமாக, புதன்கிழமை மாலை, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலை துறை இயக்குனருமான என்.சுப்பையன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். 

மல்லிப்பட்டினம் துறைமுகம், காரங்குடா புயல் பாதுகாப்பு மையம் ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தி, அங்குள்ள நிவாரண முகாம்களில் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார். பின்னர் அம்புலியாறு பகுதிக்கு வந்த அவரை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராவ் வரவேற்றார். அம்புலியாற்றின் முகத்துவாரத்தில் தற்காலிகமாக படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார். 

அவரிடம்,  சட்டமன்றத்தில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவித்த அம்புலியாறு தடுப்பணை திட்டப்பணிகளை விரைந்து தொடங்குமாறு வலியுறுத்தினார். தொடர்ந்து முடியனாறு பகுதியில் ஆற்று முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்திய சட்டமன்ற உறுப்பினர் ம.கோவிந்தராசு, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சிறப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசனை நடத்தினார். 

ஆய்வின்போது, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர், பயிற்சி ஆட்சியர் அமித், பட்டுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், மீன்துறை இயக்குநர் சிவகுமார், சேதுபாவாசத்திரம் அதிமுக  வடக்கு ஒன்றியச் செயலாளர் நாடியும் சிவ. மதிவாணன், தெற்கு ஒன்றியச் செயலாளர் அருணாச்சலம், மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் ஆர்.பி.ராஜேந்திரன், வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.