.

Pages

Monday, October 12, 2020

பட்டுக்கோட்டையில் இந்திய கம்யூ. மறியல்: 42 பேர் கைது (படங்கள்)

பட்டுக்கோட்டை, அக்.12
வேளாண் சட்ட மசோதாவைக் கண்டித்து பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 42 பேர் கைது செய்யப்பட்டனர். 

மத்திய அரசு அரசின் அத்தியாவசிய பொருள்கள் திருத்த சட்டம், மின்சாரத் திருத்தச் சட்டம், வணிக ஊக்குவிப்பு சட்டம், ஒப்பந்த சாகுபடி சட்டம் ஆகியவற்றை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பக்கிரிசாமி தலைமையில் கட்சி நிர்வாகிகள் வேளாண் மசோதா சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

போராட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இரா.திருஞானம், ஒன்றியச்செயலாளர் என்.காளிதாஸ், எம்.எம் சுதாகர், அ.கலியபெருமாள், எஸ்.தனசீலி, புபேஷ்குப்தா, அ.விஜயன், ஏ.ஐ.ஓய்.எப் ஒன்றியச் செயலாளர் கே.ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார். ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஏ.எச் பசீர் அகமது உட்பட 42 பேர் கோஷம் எழுப்பியவாறு மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து வேனில் அழைத்து அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.