.

Pages

Saturday, October 10, 2020

அதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம்!

அதிராம்பட்டினம், அக்.10
நாம் தமிழர் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், தெருமுனைப் பிரச்சாரம் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிரச்சாரத்திற்கு, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் ஏ.தேவராஜ் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை தொகுதி செயலாளர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தார். அதிராம்பட்டிணன் பேரூர் செயலாளர் மீ.ஜஹபர் சாதிக், கட்சியின் கொள்கை குறித்து எடுத்துரைத்தார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் புதுக்கோட்டை ஜெயசீலன் கலந்துகொண்டு, உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில், அக்கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, அக்கட்சியினர் வண்டிப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே கொடி ஏற்றி வைத்து கொள்கை முழக்கமிட்டனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.