.

Pages

Monday, October 12, 2020

ZOOM செயலி மூலம் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 81-வது மாதாந்திரக் கூட்டம்!

அதிரை நியூஸ்: அக்.12            
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 81-வது மாதாந்திர கூட்டம் கடந்த 09/10/2020 5-வது முறையாக ZOOM-APP எனும் காணொளி மூலம் நடைபெற்றது அதில் நமதூர் வாசிகள் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராஅத்                 : சகோ. அஸ்ரப்  (துணை தலைவர் ) 
முன்னிலை           : சகோ. S.சரபுதீன் ( தலைவர் ) 
வரவேற்புரை            : சகோ. அபூபக்கர் ( பொருளாளர்  )
சிறப்புரை              :  சகோ. A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )
அறிக்கை வாசித்தல்  :  சகோ. ஷேக் மன்சூர் ( துணை செயலாளர்)

தீர்மானங்கள்:
1) கடந்த 06-10-2020 அன்று தலைமையகம் மூலம் நலிவடைந்த ஏழை பெண்மணி அவர்களின் வாழ்வாதார உதவிக்கான தையல் மிஷினுக்கு பொருளாதார உதவிய அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை சகோதரர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

2) தலைமையகத்தின் மூலம் வந்த இலவச டயாலிசிஸ் மருத்துவ உதவி திட்டத்தின் பொருளாதார உதவியான POSITIVE MACHINE விஷயமாக கலந்து ஆலோசிக்கப்பட்டு அதற்கான முழு விவரங்களை தலைமையகம் மூலம் அறிந்து தெரிவிக்கப்பட்டது.

3) ஏழைக்குமறு திருமணம், முதல் முறையாக பைத்துல்மால் தலைமையகத்தில் வைத்து கடந்த 24-09-2020 சிறப்பாக நடத்தியதற்காகவும் அதற்கான முழு ஏற்பாட்டிற்கு உதவிய சகோதற்காக துஆ செய்யப்பட்டு இனிவரும் காலங்களில்  இது போன்று ஏழை திருமணமங்கள் ABM தலைமையகத்தில்  தொடர்வதற்கான முயற்சி செய்வதற்கு அனைவர்களும் முயற்சி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு அத்தம்பதிகளின் ஹக்கிலும் துஆ செய்யப்பட்டது.

4) புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர் துணை தலைவர் ஜனாப் S.நசுருதீன் அவர்களை வரவேற்று அப்பணி செம்மையாக செயல்பட இக்கூட்டத்தில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது

5) தற்சமயம் நமதூரில் ஏற்பட்டுள்ள சில நோயாளிகளின் அசாதாரண மருத்துவ உதவியான (ஆக்ஷின்) குறைபாடுகளை சம்சுல் இஸ்லாம் சங்கம் மூலமாகவும் அத்துடன் பைத்துல்மாலின் மூலமாகவும் உதவிவரும் இச்சேவையை ஏழை எளிய மக்கள் தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது

6) இன்ஷா அல்லாஹ் அடுத்த 82-வது அமர்வு NOVEMBER மாதம் 13-ம் தேதி நேரடியாக நடத்துவதெனவும் அதனை பத்தாஹ் RT HOTEL மாடியில் சகோ.நிஜாமுதீன் வீட்டில் நடத்துவதென ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு அதில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.