மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கான தற்காலிக தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு, மாவட்ட கல்வி அலுவலர் ஆ. இராமசுப்பு தலைமை வகித்து. பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த 19 பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணையினை வழங்கினார்.
நிகழ்வில், வட்டார கல்வி அலுவலர்கள் ரவி, சிவசாமி, மீனாசுந்தரி மாதவன் மற்றும் அலுவலக கண்காணிப்பாளர்கள் கலந்துகொண்டனர். நிறைவில் தமிழக முதல்வர், கல்வி அமைச்சர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளின் தாளாளர்கள் நன்றி கூறினர்.
முன்னதாக, நேற்று 21.10.2020 புதன்கிழமை திருச்சி ஜெ.ஜெ பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தொடர் அங்கீகாரம் வழங்கும் விழாவில் புதுக்கோட்டை உள்ளூர் ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி தாளாளர் என்.உதயகுமார் கலந்துகொண்டு தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ செங்கோட்டையனிடம் தொடர் அங்கீகாரத்திற்கான சான்றிதழைப் பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.