.

Pages

Friday, October 16, 2020

ஆதம் நகர் இளைஞர் நற்பணி மன்றம் தொடக்கம், புதிய நிர்வாகிகள் தேர்வு, அலுவலகம் திறப்பு!

அதிராம்பட்டினம், அக்.10
அதிராம்பட்டினம் ஆதம் நகர் இளைஞர் நற்பணி மன்றம் தொடக்கம், புதிய நிர்வாகிகள் தேர்வு, புதிய அலுவலகம் திறப்பு விழா மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வினை, ஹாபிழ் எம்.எஸ் முகமது முஸ்தபா கிராத் ஓதி தொடங்கி வைத்தார். நிகழ்வுக்கு, ஜமாத் துணைத்தலைவர் ஆர்.ஹசன் அலியார் தலைமை வகித்து புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். சிறப்பு அழைப்பாளர் மவ்லவி முகமது இத்ரீஸ் சிறப்புரை வழங்கினார்.

நிகழ்வில், ஆதம் நகர் இளைஞர் நற்பணி மன்ற புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், தலைவராக டி.அல் அமீன், செயலாளராக ஏ.நாவித் அகமது, துணைச்செயலாளராக ஏ.வாசிம்கான், பொருளாளராக பி.முகமது அசாருதீன், துணைப்பொருளாளராக எஸ்.அப்துல் பாசித், மருத்துவ அணி பொறுப்பாளராக எஸ். சைத் இப்ராஹீம் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில், ஆதம் நகர் ஜமாத்தார்கள், இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.


1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.