.

Pages

Friday, October 2, 2020

மதுக்கூரில் மத்திய அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

மதுக்கூர், அக்.02
மதுக்கூரில் நாம் தமிழர் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடத்தினர். 

அக்கட்சியின், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் ஏ.தேவராஜ் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை தொகுதி செயலாளர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தார். மாநிலப் பேச்சாளர் கரிகாலன் கண்டன உரை நிகழ்த்தினார். 

இதில், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் திரளாக கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.