.

Pages

Saturday, October 31, 2020

அதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியின் அரசியல் பயிலரங்க நிகழ்ச்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.31
எஸ்டிபிஐ கட்சியின் சார்பில், அரசியல் பயிலரங்க நிகழ்ச்சி அதிராம்பட்டினத்தில் (30-10-2020) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எஸ்.அகமது அஸ்லம் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் என்.சஃபியா, தஞ்சை தெற்கு மாவட்டத்தலைவர் என்.முகமது புஹாரி ஆகியோர் சிறப்புரை வழங்கினர். பின்னர், பயிலரங்கில் பங்கேற்றோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினர்.

பயிலரங்கில், எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து பேசப்பட்டன. கட்சி சார்பில் பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய தொகுதிகளில் நிறுத்தப்படும் வேட்பாளர்களின் வெற்றிக்காக தீவிரமாக களப்பணியாற்றுவது, அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு பூத் கமிட்டி நியமிப்பது என்பன உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டன. இப்பயிலரங்கில், பெண்கள் உட்பட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வினை, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் இணைச்செயலாளர் சி.அகமது தொகுத்தளித்தார். நிறைவில், அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் எம்.ஜர்ஜிஸ் அகமது நன்றி கூறினார்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.