.

Pages

Saturday, October 24, 2020

'வளங்களைக் காப்போம்' கடலோர விழிப்புணர்வு பிரச்சாரம்!

அதிராம்பட்டினம், அக்.24
தேசிய மீனவர் பேரவை மற்றும் ஆதரவு அமைப்புகள் சார்பில், கடல் வளம், நிலவளம், பொதுவளம், சுற்றுச்சூழல், கடலோர மற்றும் விவசாய சமூக வாழ்வாதாரங்களை பாதுகாத்திட வலியுறுத்தி 'வளங்களைக் காப்போம்' எனும் தலைப்பில், கடலோர விழிப்புணர்வு பிரச்சாரம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

பிரசாரத்திற்கு, ஏஐடியூசி சங்க மாவட்டச் செயலர் என். காளிதாஸ் தலைமை வகித்தார். தேசிய மீனவர் பேரவை துணைத் தலைவர் குமரவேல் முன்னிலை வகித்தார். 

இதில், விவசாய தொழிற்சங்க செயலாளர் சி.பக்கிரிசாமி, ஏ.கலியபெருமாள், பாலுசாமி, பூபேஷ் குப்தா, ஏ.ஐ.ஓய்.எப் ஒன்றியச் செயலாளர் கே.ஹாஜா முகைதீன், ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஏ.எச் பசீர் அகமது, பன்னீர்செல்வம், மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.