பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில், கையில் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் அதிராம்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு, அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் ஏரியா தலைவர் எஸ்.முகமது ஜாவித் தலைமை வகித்தார். இதில், அவ்வமைப்பினர் அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளிவாசல், புதுமனைத்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல், கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் ஆகிய 3 இடங்களின் நுழைவாயில் முன்பாக, கையில் பதாகைகளை ஏந்தியவாறு கண்டன முழக்கமிட்டனர். முன்னதாக, எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.முகமது புஹாரி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் இசட். முகமது தம்பி, ராஜிக் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.