.

Pages

Tuesday, October 6, 2020

பேரூராட்சி பகுதிகளில் நூறு நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும்: மனுக்கொடுத்து ஆர்ப்பாட்டம்!

தஞ்சாவூர் அக்.06-
பேரூராட்சி பகுதிகளிலும் நூறுநாள் வேலைத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நூறு நாள் வேலையை 200 நாட்களாகவும், தினக்கூலியை ரூ 600 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். கொரோனா காலத்திற்கு சிறப்பு நிவாரணமாக குடும்பத்திற்கு ரூ 7,500 வழங்க வேண்டும். 60 வயதைக் கடந்த அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியமாக மாதம் ரூ 3 ஆயிரம் வழங்க வேண்டும். 

கொரோனா பேரிடர் காலம் முழுவதும் ரேசன் கடைகளில், பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், பேரூராட்சி அலுவலகங்களில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லம், சுவாமிமலை, அதிராம்பட்டினம், பெருமகளூர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் 1500 பேர் கலந்து கொண்டனர். 2,100 மனுக்கள் அளிக்கப்பட்டன. 

கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர். 

தஞ்சாவூர் 
தஞ்சாவூர் ஒன்றியம் வல்லம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, விதொச ஒன்றியச் செயலாளர் கே.அபிமன்னன் தலைமை வகித்தார். எம்.ஜி.அந்தோணிசாமி, இ.பார்வதி முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்த ராஜூ தொடங்கி வைத்துப் பேசினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.மாலதி கண்டன உரையாற்றினார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் நிறைவுரையாற்றினார். எல்.ராமராஜ், சௌந்தரராஜன், அபிமன்னன் மற்றும் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட 620 பேர் கலந்து கொண்டு, 850 மனுக்களை அளித்தனர். 

சுவாமிமலை
கும்பகோணம் ஒன்றியம் சுவாமிமலை பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விதொச ஒன்றியச் செயலாளர் ஆர்.தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் ஆர்.நாகமுத்து, ஒன்றியப் பொருளாளர் கே.கலையரசன், அ.இ.ஜ.மாதர் சங்கம் ஒன்றியத் தலைவர் ஆர்.கலா, ஒன்றியச் செயலாளர் எஸ்.மகேஸ்வரி, ஒன்றியக்குழு உறுப்பினர் கே.புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி, துவக்கி வைத்துப் பேசினார். விதொச மாநிலக்குழு உறுப்பினர் சி.நாகராஜன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பி.ஜேசுதாஸ், நகரச் செயலாளர் கே.செந்தில்குமார்,  மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் 200 பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வேலை கேட்டு 500 மனுக்கள் கொடுக்கப்பட்ட.ன. 

சேதுபாவாசத்திரம் 
சேதுபாவாசத்திரத்தில் ஒன்றியம், பெருமகளூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றியத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பையா முன்னிலை வகித்தார். விதொச மாவட்டத் தலைவர் ஆர்.வாசு கண்டன உரையாற்றினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் பி.கே.சண்முகம் மற்றும் சோனமுத்து மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் கலந்து கொண்டு 210 மனுக்களை அளித்தனர். 

அதிராம்பட்டினம் 
பட்டுக்கோட்டை ஒன்றியம், அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றியக்குழு உறுப்பினர் கே.சோமசுந்தரம் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வம், ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, கிளைச் செயலாளர் தண்டபாணி, மணல் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சங்கம் சக்திவேல் மற்றும் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.