உ.பி, ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மீது தாக்குதல் நடத்திய உத்தரபிரதேச அரசை கண்டித்து தஞ்சை தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தஞ்சை ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம் ஜெய்னுல் ஆபிதீன் தலைமை வகித்தார். அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் ஏ.எம் அப்துல் காதர், வல்லம் ஜெ.பசீர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ (திமுக), டி.கே.ஜி நீலமேகம் எம்.எல்.ஏ (திமுக), து. கிருஷ்ணசாமி வாண்டையார் (காங்கிரஸ்), பி.ஜி இராஜேந்திரன் (காங்கிரஸ்), ஒய்.அலாவுதீன் (காங்கிரஸ்) மற்றும் மதிமுக, சிபிஎம், சிபிஐ, திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டித்துப் பேசினர்.
முன்னதாக, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் வழக்குரைஞர் ஏ.முனாப் வரவேற்றுப் பேசினார். நிறைவில், தஞ்சை மாநகரப் பொருளாளர் ஏ.கே முகமது முஸ்தபா நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் உத்தரபிரதேச அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்பாட்டத்தில், அக்கட்சியின் மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி எம்.ஆர் ஜமால் முகமது, எம்.கே.எம் முகமது அபூபக்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.