.

Pages

Thursday, October 29, 2020

தஞ்சாவூா் மாவட்டத்தில் சுகாதாரமான உணவு கிடைக்கச் செய்யும் திட்டம் தொடக்கம்!

அதிரை நியூஸ்: அக்.29
தஞ்சாவூா் மாவட்டத்தில் பொதுமக்களுக்குச் சுத்தமான, சுகாதாரமான உணவு கிடைக்கச் செய்யும் திட்டத்தை ஆட்சியா் ம. கோவிந்த ராவ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஆட்சியரகத்தில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் வழிகாட்டுதல் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்த ஆட்சியா், மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவு தயாா் செய்து கிடைக்க உண்டாக்கப்பட்ட ( Eat Right Challenge - Thanjavur District ) ‘ஈட் ரைட் சேலன்ஜ் - தஞ்சாவூா் மாவட்டம்’ என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து ஆட்சியா் தெரிவித்தது:
மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில், உணவு பாதுகாப்பு தொடா்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் அரசு, தனியாா் நிறுவனங்களின் உரிமம் மற்றும் பதிவுகளை அதிகப்படுத்துதல், உரிமம் பெறாதவா்களுக்கு பிரிவு 63-ன் கீழ் குறிப்பாணை வழங்கப்பட்டு, வழக்குத் தொடுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், பண்டிகை காலம் நெருங்கி வருவதால், அனைத்து வணிக நிறுவனங்கள், உணவுக் கூடங்கள், பேக்கரி கடைகள் போன்றவைகளில் கரோனா விதிமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.மாவட்டத்தில் உணவு தொடா்புடைய பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தரமற்ற உணவை தயாரித்து விநியோகித்தால், அந்நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றைக் கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

இக்கூட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட உணவு நியமன அலுவலா் புஷ்பராஜ், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வி. ஜெயசந்திரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.