வேலைவாய்ப்பற்ற 50,000 நபர்களுக்கு இணைய வாயிலாக இலவசமாக குறுகிய கால திறன் பயிற்சிகளில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்தராவ் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமானது, அமெரிக்க நிறுவனமான கோர்ஸெரா (Coursera) நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாட்டில்; வேலைவாய்ப்பற்ற 50,000 நபர்களுக்கு, இணைய வழியில் 11 துறைகளில் 4000-த்திற்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளில்; இலவசமாக குறுகிய கால திறன் பயிற்சிகள் அளித்திடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கோர்ஸெரா நிறுவனம் 80 நாடுகளில் உலகத்தரம் வாய்ந்த திறன்களை வளர்க்கும் இலவச பயிற்சி வகுப்புகளை இணையம் வழியாக நடத்தி வருகிறது. மேலும் இந்நிறுவனம் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கூகுள், ஐபிஎம் மற்றும் பிற அரசு நிறுவனங்களுடன் இணைந்து பொறியியல், இயந்திர கற்றல், கணிதம், வணிகம், கணினி அறிவியல், டிஜிட்டல் சந்தைப்படுத்துதல், மருத்துவம் . உயிரியல், சமுக அறிவியல் மற்றும் பிற பாடங்களில் இணைய வழியில் வகுப்புகளை நடத்தி சான்றிதழ் படிப்புகள் மற்றும் பட்டப்படிப்புகளை வழங்குகிறது. உலகின் முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் உள்ள பயிற்றுநர்களைக் கொண்டு தரமான பாடக்குறிப்புகள் மற்றும் காணொளி பாடத் தொகுப்புகளுடன் பயிற்றுவிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்தவுடன் இணையம் வழியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வேலைவாய்ப்பும் அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சியைப் பெற விரும்புவர்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவராகவும், 18 வயது பூர்த்தியானவராகவும், வேலைவாய்ப்பற்றவராகவும் இருத்தல் வேண்டும். மேலும், இப்பயிற்சியைப் பெற ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண் ஆகிய விவரங்களுடன் 31.10.2020-க்குள் tnskill.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.