உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் வழிகாட்டுதலின் படி, மார்பகபுற்று நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு, அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் எஸ்.கார்த்திகேயன் தலைமை வகித்தார். நிகழ்வில், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் சுயபரிசோதனை செய்துகொள்தல் பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மார்பக புற்றுநோய் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இதில், 30க்கும் மேற்பட்ட பெண்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.