.

Pages

Thursday, November 28, 2013

எக்ஸ்போ 2020 கண்காட்சி நடத்த துபாய் தேர்வுக்கு அதிரையர்கள் கலிஃபாவை சந்தித்து வாழ்த்து [ புகைப்படங்கள் ] !

2020ம் ஆண்டுக்கான உலக வர்த்தக எக்ஸ்போ கண்காட்சி நடத்துவதற்கு துபாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அமீரகத்தில் வசிக்கும் மக்கள் இந்த முடிவை மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதில் அமீரக வாழ் அதிரையர் பலர் மகிழ்ச்சிகளை சக நண்பர்களுடன் பரிமாறிக்கொண்டு வருகின்றனர்.

இதில் நெசவுத்தெரு அமீரக அமைப்பின் பொருளாளர் N. முஹம்மது தாஹா, அமீரக தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தின் செயலாளார்  N.K.M. நூர் முஹம்மது [நூவன்னா] ஆகியோர் சேக் கலிஃபா [ In charge of Ministry of Environment & Water Department அவர்களை சந்தித்து தங்களின் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொண்டனர். மேலும் எதிர் வரும் டிசம்பர் 2 அன்று கொண்டாடப்பட உள்ள அமீரக தேசிய தினத்திற்கும் தங்களின் வாழ்த்துகளை முன்னதாக தெரிவித்துக்கொண்டனர்.

பிரேசில், துருக்கி மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளும் இந்த எக்ஸ்போ கண்காட்சியை நடத்தப் போட்டியிட்டிருந்தன. இந்தப் போட்டியில் துபாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. பாரிஸில் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் துபாயில் இருக்கும் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவின் இரு பக்கங்களிலிருந்தும் வெடிகள் வெடிக்கப்பட்டன. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த எக்ஸ்போ கண்காட்சி ஒரு மத்திய கிழக்கு பகுதி மாநகரில் நடப்பது இதுவே முதன்முறை.

இந்த கண்காட்சியை உலகமே பிரமிக்கும் வகையில் நடத்தப்போவதாக துபாயின் மன்னர் ஷேக் அல் மக்தூம் உறுதியளித்திருக்கிறார்.
இதை நடத்த புதிய இடம் ஒன்றுக்காக சுமார் ஒன்பது பிலியன் டாலர்கள் முதலீடு செய்யப்படும்.

2015ம் ஆண்டுக்கான எக்ஸ்போ இத்தாலியில் உள்ள மிலான் நகரில் நடக்கவிருக்கிறது.

செய்தியும், புகைப்படமும் 
N.K.M. நூர் முஹம்மது [ நூவண்ணா ]





2 comments:

  1. Very very important news...I think this photos taken at exhibition

    ReplyDelete
  2. where is other comment which was posted by some one??? what happened to you author??? why criticism is removed???

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.