.

Pages

Tuesday, November 19, 2013

குழாய்கள் உடைப்பும் ! கேபிள்கள் துண்டிப்பும் !!

அதிரையில் 2500 க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் இணைப்புகள் உள்ளன. இதில் அதிகளவில் இன்டர்நெட் இணைப்புகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

சமிபகாலமாக அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குளங்களின் புனரமைப்பு பணிகள், சாலைகள் அமைப்பது, புதிய வாய்க்கால் வடிகால் அமைத்தல், குடிநீர் குழாய்கள் புதைப்பு உள்ளிட்ட நகர வளர்ச்சி திட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப்பணிகள் அதிரை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக முறையாக டெண்டர் விடப்படுகின்றன. இவற்றை சில ஒப்பந்ததாரர்கள் எடுத்து செயல்படுத்தி வருகின்றனர்.




இந்த பணிக்காக பிரதான சாலைகள் மற்றும் குறுக்கு சாலைகளில் பல அடி தூரத்துக்கு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டப்படுகின்றன. இவ்வாறு தோண்டும்போது தொலைப்பேசி கேபிள்கள் துண்டிக்கப்பட்டு சேவை முழுதும் பாதிக்கப்படுகின்றன. இதனால் பாதிக்கப்படுவது வணிகர்களும்,பொதுமக்களும்தான்.

அதேபோல் குடிநீர் குழாய்களும் தோண்டப்படும் பள்ளதால் உடைந்து குடிநீர் வீணாகுகின்றன. ஏற்கனவே நகரில் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதற்கு மின்தடை, நீர்மட்டம், பழுதுகள் போன்ற காரணங்களை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டு வந்தாலும் ஜேசிபி இயந்திரத்தால் அவ்வப்போது நிகழும் குழாய் உடைப்புகளால் குடிநீர் தடைபடுவது பொதுமக்களை மேலும் அவதியுறவைக்கும்.

நகர வளர்ச்சி திட்ட பணிகள் அவசியமானது என்றாலும், பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத முன்னெச்சரிக்கையுடன் பணிகளை கையாள்வது ஒப்பந்தக்காரர்களின் தலையாயக் கடமையாகும். அதேபோல் இவர்களின் பணியை முறையாக செயல்படுத்த அலுவலர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகளும், பொதுமக்களும் இவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பணிகள் துவங்கும் முன்பு குடிநீர் குழாய்கள், தொலைத்தொடர்பு கேபிள்கள் ஆகியன செல்லும் பாதைகளை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்புதல் பெற்று பணியை துவக்குவது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மக்களின் வரிப்பணமும் வீணாவதை தடுக்க இயலும். அவசர கோலத்தில் பார்க்கும் வேலை என்றும் நன்மை பயக்காது என்பதை மனதில் இருத்திக்கொள்வோம்.

1 comment:

  1. நல்ல விசயம் தான் இருந்தாலும் போன் வயர் இன்டர்நெட் வயர் குடிநீர் குழாய் மற்றும் அசுத்தமான வாட்டர் பைப்புகள் இவைகளை பார்த்து பாதிப்பு இல்லாமல் செய்தால் மக்கள் வர வேறபார்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.