சமிபகாலமாக அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குளங்களின் புனரமைப்பு பணிகள், சாலைகள் அமைப்பது, புதிய வாய்க்கால் வடிகால் அமைத்தல், குடிநீர் குழாய்கள் புதைப்பு உள்ளிட்ட நகர வளர்ச்சி திட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப்பணிகள் அதிரை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக முறையாக டெண்டர் விடப்படுகின்றன. இவற்றை சில ஒப்பந்ததாரர்கள் எடுத்து செயல்படுத்தி வருகின்றனர்.
அதேபோல் குடிநீர் குழாய்களும் தோண்டப்படும் பள்ளதால் உடைந்து குடிநீர் வீணாகுகின்றன. ஏற்கனவே நகரில் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதற்கு மின்தடை, நீர்மட்டம், பழுதுகள் போன்ற காரணங்களை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டு வந்தாலும் ஜேசிபி இயந்திரத்தால் அவ்வப்போது நிகழும் குழாய் உடைப்புகளால் குடிநீர் தடைபடுவது பொதுமக்களை மேலும் அவதியுறவைக்கும்.
நகர வளர்ச்சி திட்ட பணிகள் அவசியமானது என்றாலும், பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத முன்னெச்சரிக்கையுடன் பணிகளை கையாள்வது ஒப்பந்தக்காரர்களின் தலையாயக் கடமையாகும். அதேபோல் இவர்களின் பணியை முறையாக செயல்படுத்த அலுவலர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகளும், பொதுமக்களும் இவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பணிகள் துவங்கும் முன்பு குடிநீர் குழாய்கள், தொலைத்தொடர்பு கேபிள்கள் ஆகியன செல்லும் பாதைகளை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்புதல் பெற்று பணியை துவக்குவது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மக்களின் வரிப்பணமும் வீணாவதை தடுக்க இயலும். அவசர கோலத்தில் பார்க்கும் வேலை என்றும் நன்மை பயக்காது என்பதை மனதில் இருத்திக்கொள்வோம்.
நல்ல விசயம் தான் இருந்தாலும் போன் வயர் இன்டர்நெட் வயர் குடிநீர் குழாய் மற்றும் அசுத்தமான வாட்டர் பைப்புகள் இவைகளை பார்த்து பாதிப்பு இல்லாமல் செய்தால் மக்கள் வர வேறபார்கள்.
ReplyDelete