.

Pages

Tuesday, November 26, 2013

உள்ளங்களை உலுக்கிய மனங்களின் சாட்சி [ புகைப்படங்கள் ]

கண்கவரும் பொருட்காட்சி, கண்காட்சி என எத்தனையோ கண்டுகளித்திருப்போம் ஆனால் இதற்கு மாற்றாக உள்ளங்களால் உணர்ந்து பார்ப்பதற்காக கடந்த நவம்பர் 2013, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் துபை ஜமியத்துல் இஸ்லாஹ் அரங்கில் 'இஸ்லாத்தை ஏற்க 100க்கு மேற்பட்ட காரணங்கள்' என்ற பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்துக்காட்சி, குறிப்பாக துபை மாநகரில் இஸ்லாத்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் தழுவிய சகோதர, சகோதரிகளின் உள்ளத்து உணர்வுகள் காட்சியாய் ஏற்பாடு செய்யப்பட்டு காண்போரின் மனசாட்சியை உலுக்கும் நிறைவான நிகழ்வாய் அமைந்திருந்தது.

 

துபை மாநகரில் உயர்பதவிகள், தொழிலாளர்கள் என பல மட்டங்களிலும் பணிபுரிந்த, பணியாற்றுகின்ற நூற்றுக்கணக்கான சகோதர, சகோதரிகள் தங்களின் வாழ்வியலாக இஸ்லாம் எனும் பொக்கிஷம் கிடைத்த தருணங்களை, காரணங்களை, விவரித்த விடயங்களை இரத்தினச்சுருக்கமாக தொகுத்து, எளிய ஆங்கிலத்தில், கருத்துக்களையே காட்சிகளாக்கி அழகுற பேனர் வடிவில் வரிசைபடுத்தியிருந்தனர்.

 

இரு தினங்களும் நிறைந்த அரங்கமாக, ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்களும், தஃவா பணியாளர்களும், மொழி, நாடு, நிறம், பேதமின்றி சர்வதேச மக்களும் திரளாக கலந்து பயன்பெற்றுச் சென்றனர்.

 

அரங்கில் பம்பரமாக சுழன்ற இறை மார்க்கத் தொண்டர்களில் அனேகர் பெண்களே! அதிலும் இஸ்லாத்தை ஏற்ற புதிய சொந்தங்களே வழிகாட்டி, வந்தோருக்கு விளக்கி உவந்தனர். அரபி, ஆங்கிலம், தகலோக் என சர்வதேச மொழிகள் பலவற்றுடன் ஹிந்தி, மலையாளத்துடன் நம் தமிழிலும் விளக்கமளித்தனர்.


துபை அவ்காஃப் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்விலும் 3 பேர் இஸ்லாத்தை தங்களின் வாழிவியல் நெறியாக ஏற்றனர்.

 

பேரதிர்ச்சி தரும் உண்மை : 

பொதுவாக, இன்றைய முஸ்லீம்களின் நடவடிக்கைகளை பார்க்கும் ஒருவன் ஒருபோதும் இஸ்லாத்திற்கு வரமாட்டான் என்ற அவச்சொல் நிலவுவதை யாவரும் அறிவோம் என்றாலும் இங்கே பலரும் இஸ்லாத்தை தழுவுவதற்கு சில முஸ்லீம்களின் தூய இஸ்லாமிய செயற்பாடுகளேகாரணமாக அமைந்ததென சான்று பகர்ந்துள்ளனர் நமைமிகைத்த நம்மின் புதிய சகோதர, சகோதரிகள். அப்படியாயின் நம்முடைய வாழ்க்கை ???


செய்தி தொகுப்பு : அதிரை அமீன் 

நன்றி: http://aimuaeadirai.blogspot.in/2013/11/blog-post_1708.html







































1 comment:

  1. அல்லாஹு போதுமானவன் எல்லாம் வல்ல ரப்பு ஒருவனே.கண்க்கொள்ள காட்சியாக இருந்தது புகைப்படம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.