.

Pages

Thursday, November 21, 2013

கழிவுகள் நீக்கப்பட்டு தண்ணீருக்காக காத்திருக்கும் செடியன் குளம் !

சுமார் 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவில் அமைந்துள்ள செடியன் குளம் மிகவும் பழமைவாய்ந்தது. உள்ளூர் மக்கள் நீராடி மகிழ்வதற்கு மாத்திரமல்ல, ஆடு மாடுகள், பறவைகள் நீர் அருந்தி செல்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் பயன்தரக்கூடியதாகவும், நீர் ஆதாரத்தை இந்தப்பகுதிகளுக்கு வாரி வழங்கக்கூடியவையாகவும் இருந்து வருகின்றன.

இக்குளத்தில் நீர் வற்றிவரும் நேரத்தில் சகதிகளாலும், கழிவுகளாலும் சூழப்பட்டு துர்நாற்றங்கள் வீசிவரும் நேரங்களில் இந்தப்பகுதி மக்களுக்கு சுகாதாரக்கேடுகளை ஏற்படுத்த தவறியதில்லை. இந்த குளத்தை பல்வேறு அரசியல் தலைவர்களிடம் தூர்வார கோரிக்கை வைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கைப்போன்று அவர்கள் கண்டுகொள்ளாததை அடுத்து களத்தில் இறங்கிய பெரிய ஜும்மா பள்ளி நிர்வாகத்தினர் தனது சொந்த செலவில் சுமார் 1.50 லட்சம் மதிப்பீட்டில் குளத்தை சூழ்ந்து காணப்பட்டுவந்த கழிவுகளை முற்றிலுமாக நீக்கியுள்ளனர். இதற்காக ஜேசிபி இயந்திரம், டிராக்டர் வாகனங்கள் மூலம் கடந்த சில வாரங்களாக பணிகள் நடைபெற்று வந்தன.

கழிவுகள் முற்றிலும் நீக்கப்பட்டு குளம் தயாராக இருக்கிறது. இனிவரும் சில ஆண்டுகளுக்கு நமக்கு துர்நாற்றம் வீசுவது இருக்காது என்றாலும், இறைவனின் அருட்கொடைகளில் ஒன்றாகிய மழை பொழிந்தால் மட்டுமே காலங்காலமாக குளத்தில் நீந்தி மகிழ்ந்து நீராடுவோருக்கும் - நமதூருக்கும் நன்மை பயக்கும் என்பதில் ஐயமில்லை.




7 comments:

  1. நாங்கள் சின்ன பிள்ளையாக இருக்கும்போது, எங்கள் தாயாருடன் வந்து இந்தக் குளத்தில் குளித்து இருக்கின்றோம். இப்போ இதை சரிசெய்து தண்ணீருக்காக காத்திருக்கின்றது. இருந்தாலும் பெண்களுக்கென்று மறைவான ஒரு குளியல் துறை இருந்தால் நல்லாஇருக்கும்.

    நிறைவேறுமா?

    ReplyDelete
  2. மறக்க முடியுமா செடியன் குளத்தில் குளித்ததே

    ReplyDelete
  3. இந்த குளத்தில் அருகைமையினால் இருக்கும் வீடுகளில் இருந்து கழிவு நீர்கள் நேராக குளத்தில் தான் கலக்கிறது எல்லாம் அறிந்ததே. இதை முதலில் தடுத்தி நிறுத்த வேண்டும் இல்லையெல் குளம் சீர்கேடாக தான் இருக்கும்

    ReplyDelete
  4. செடியங்குளம் ஒரு நேரத்தில் அனைவருமே நீராடி மகிழ்ந்த குளம். யாரும் மறக்க முடியாத அதிரை நினைவுச் சின்னங்களில் செடியங்குளமும் ஒன்று. இனியாவது இக்குளத்தை பாதுகாத்து சுகாதாரமாக வைத்துக் கொள்வது அதிரையர்களின் கடைமையாகும்.

    ReplyDelete
  5. வரும் காலங்களில் வரலாறு மிக்க குளம் ஓன்று இருந்தது என்று சொன்னால் மிகை ஆகாது.அதிரையில் பிறந்த அனைவரும் இந்த குளத்தில் குளித்து இருப்பார்கள்.இந்த குளத்தை குளிபதற்கு மட்டும் பயன்படுத்தினால் நல்லது இதில் சுற்றி உள்ள வீடுகளின் அசுத்த தண்ணீர் கலக்கப்படுக்கிறது ஆதலால் இந்த குளம் சீக்கிரம் தண்ணீர் வீனா போக்கிறது.

    ReplyDelete
  6. குளத்தை சுத்தம் செய்யதால் மட்டும் போதாது இந்த குளத்தை சுற்றி இருக்கும் வீடுகளிலிருந்து வரும் கழிவு நீர்கள் நேராக குளத்தில் வந்து கலப்பதை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும் இல்லை என்றால் என்ன தான் சுத்தாம் செய்தும் ஒரு புண்ணியமும் கிடையாது முதலில் இதுக்கு தக்க நடவடிக்கை எடுக்குமா நமது ஜும்மா பள்ளி நிர்வாகம் ?

    ReplyDelete
  7. மறக்க முடியுமா செடியன் குளத்தில் குளித்ததே

    Reply

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.