.

Pages

Friday, November 22, 2013

பாஸ்போர்ட் விநியோகத்தில் போலீஸ் சரிபார்ப்பு பணியை விரைவுபடுத்த புதியமுறை அறிமுகம் !

பாஸ்போர்ட் வினியோகத்தில் போலீஸ் சரிபார்ப்பு பணியை விரைவுபடுத்த புதிய முறை 1–ந்தேதி முதல் அமல் திருச்சி மண்டல அதிகாரி தகவல்

பாஸ்போர்ட் வினியோகத்தில் போலீஸ் சரிபார்ப்பு பணியை விரைவுபடுத்த புதியமுறை 1–ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் தெரிவித்தார்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் விரைவாக பாஸ்போர்ட் வழங்கும் முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் தலைமை தாங்கினார். திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் புதிய முறை குறித்து விளக்கம் அளித்தார். இதில் தஞ்சை மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:–
பாஸ்போர்ட் வினியோகம் செய்வதற்கு முன்பாக போலீஸ் சரிபார்ப்பு பணி நடக்கும். பாஸ்போர்ட்வேண்டி விண்ணப்பம் கொடுப்பவர்களுக்கு நாங்கள்(பாஸ்போர்ட் அலுவலகம்) 50 சதவீதம் பணி செய்கிறது என்றால் மீதமுள்ள 50 சதவீத பணிகளை போலீஸ்துறை தான் செய்கிறது. பாஸ்போர்ட் தொடர்பான விசாரணைக்காக விண்ணப்பங்களுடன் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை முதலில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்புவோம். பின்பு அங்கிருந்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு அனுப்பப்படும்.

அந்த விண்ணப்பத்தை வைத்து கொண்டு போலீசார் விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு சென்று விசாரணை நடத்தி அந்த விவரத்தை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார்கள். பின்பு அங்கிருந்து மீண்டும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதனால் 15 நாட்கள் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க புதிய முறையை அறிமுகப்படுத்த இருக்கிறோம். அதாவது மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து நேரடியாக போலீஸ் நிலையங்களுக்கு விண்ணப்பங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். இதற்கான நகல் இமெயில் மூலம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

இதனால் போலீஸ் சூப்பிரண்டின் உத்தரவுக்கு காத்து இருக்காமல் போலீசாரே விண்ணப்பம் தொடர்பாக விசாரணை நடத்தி அதன் விவரத்தை நேரடியாக மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கே போலீசார் அனுப்பி வைக்கலாம். இதனால் பாஸ்போர்ட் வினியோகம் செய்வதில் ஏற்படும் காலதாமதம் 10 முதல் 15 நாட்களுக்கு குறையும். சென்னைக்கு அடுத்து பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் அதிகமாக தஞ்சைக்கு தான் வருகிறது. இதனால் இந்த புதிய முறையை பரிசோதனை அடிப்படையில் வருகிற(டிசம்பர்) 1–ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் கூறியதாவது:–
பாஸ்போர்ட் விண்ணப்ப விசாரணையை தாமதப்படுத்தக்கூடாது. தவறான தகவல்களையும் போலீசார் தெரிவிக்கக்கூடாது. இந்த புதிய முறையால் பாஸ்போர்ட் விண்ணப்பம் தொடர்பான விசாரணை விரைவாக நடக்கும். பாஸ்போர்ட் விண்ணப்பம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தக்கூடாது என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீறி அதை செய்தால் நன்றாக இருக்காது. தினமும் காலை, மாலை நேரங்களில் பாஸ்போர்ட் தொடர்பான விண்ணப்பம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணையை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்காணிக்க வேண்டும். பாஸ்போர்ட் பெற்று தருகிறேன் என்று புரோக்கர்கள் பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றி விடுவதாக புகார் வருகிறது. இதனால் புரோக்கர் நடமாட்டத்தை கண்காணித்து, பொதுமக்களை ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இதில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி : தினத்தந்தி
Source : http://www.dailythanthi.com/2013-11-22-trichy-passport-office-police-verification-process

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.