.

Pages

Friday, November 29, 2013

அதிரையில் நடைபெற்ற த.மு.மு.க வின் செயல்வீரர்கள் கூட்டம் !

இன்று மாலை 6.30 மணியளவில் த.மு.மு.க அதிரை நகர அலுவலக வளாகத்தில் த.மு.மு.க வின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அஹமது ஹாஜா, நகரத் தலைவர் சாதிக் பாட்சா, நகர செயலாளர் தமீம் அன்சாரி, நகர பொருளாளர் செய்யது முகம்மது புகாரி, அல்அய்ன் மண்டல செயலாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சாகுல் ஹமீது, ம.ம.க நகர செயலாளர் ஹாலித் ஆகியோர் முன்னிலையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில்

1. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கை விரைந்து முடித்து தீர்ப்பை வழங்க வேண்டும்.

2. பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. பாப்ரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும். 

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி த.மு.மு.க தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக எதிர்வரும் [ 06-12-2013 ] அன்று மாலை 4 மணியளவில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற உள்ள மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் நகர கிளை சார்பாக பெறும் திரளாக சென்று கலந்துகொள்வது.

மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தின் அவசியம் குறித்து த.மு.மு.க தலைமை கழக பேச்சாளார் திண்ணை பாருக் அவர்கள் மூலம் நடத்த இருக்கிற தெருமுனை பிரச்சாரத்தை நகரில் உள்ள சுமார் 7 முக்கிய பகுதிகளில் எதிர்வரும் [ 02-12-2013 ] அன்று காலை 9 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடத்துவது.

உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் தரகர் தெரு கிளைத்தலைவர் அஹமது யாசின், நெசவுத்தெரு கிளைத்தலைவர் சகாபுதீன், மேலத்தெரு கிளைத்தலைவர் நியாஸ், பிலால் நகர் கிளைத்தலைவர் இப்ராஹிம்ஷா ஆகியோர் தலைமையில் அந்தந்த கிளை நிர்வாகிகளும், த.மு.மு.க / ம.ம.க வின் இதர நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

இறுதியில் நன்றியுரையை ஒன்றிய செயலாளர் சாந்தா சாகுல் ஹமீது நிகழ்த்தினார். 









1 comment:

  1. naam intha dec 6 porattam mikka avasiyam kaaranam irukkinra palliyai inimel evanum kai vaikkakoodathu yenru thaan naam intha poratathai thodarnthu nadathikkonduirukkirom itharku yellorum aatharavu alikkavendum naam poradum poraatathirku nichayam 'allah' vetriyai tharuvaan

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.