.

Pages

Sunday, November 24, 2013

காதீர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் பொதுத்தேர்வு தொடர்பான கோரிக்கை மனு !

தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கு எற்ப 25-10-2013 அன்று மாநில சிறுபான்மை நல ஆணையர் தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் அரசு தேர்வுகள் மற்றும் பொது தேர்தல்கள் ஜும்ஆ தினத்தன்று நடத்த வேண்டாம் என நம் காதீர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆடுதுறையை சேர்ந்த மகபூப்ஜான் ஆகியோர் சேர்ந்து கோரிக்கை மனு ஒன்றை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கடிதமாக அனுப்பினார்கள். அதன்படி மாநில சிறுபான்மையினர் ஆணையம் இந்த கோரிக்கையை பரிசீனைக்கு எடுத்துக்கொண்டு காதீர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி அவர்களுக்கு அனுப்பிய பதில் மனுவை  அனுப்பியுள்ளனர்.
          மேற்படித்திட்டம் அமலாகும் பட்சத்தில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு இடையூறு ஏற்படாதவாறு  அனைவருக்கும் ( மாணவர்கள் , ஆசிரியர்களுக்கு ) தொழுகை கிடைக்க ஏதுவாகும். அனைவரும் இதற்காக துஆ செய்வோமாக.

குறிப்பு :
நகல் பகுதியில் மஹபூப் அலி என்பதற்கு பதிலாக மஹபூப் ஜான் என குறிப்பிடப்பட்டுள்ளது.

3 comments:

  1. சிறந்த கோரிக்கையை சம்பந்தப்பட்டோரின் பார்வைக்கு தகுந்த நேரத்தில் எடுத்துச்சென்றுள்ளீர்கள்.

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகின்றோம்...

    ReplyDelete
  2. பாராட்டுவோம்.

    அதே நேரம் அரசுத் துறைகள் எப்படி கவனமாக வேலை செய்கின்றன என்பதற்கு ஒரு உதாரணம் இந்தக் கடிதத்திலேயே இருக்கிறது. குறிப்பாக முஸ்லிம் பெயர்களை எழுதுவதில் அல்லது தட்டச்சு செய்வதில் அரசுத்துறைகள் கவனம் எடுத்துக் கொள்வதில்லை.

    ReplyDelete
  3. ஆளும் கட்சிக்கு மட்டுமல்ல அரசுத்துரைகளுக்கும் பொதுத் தேர்தலின் மேல்தான் கண் போல தெரிகிறது.

    பொதுத்தேர்வு என்பதை பொதுத் தேர்தல் என்று தட்டச்சு செய்து இருக்கிறார்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.