
பிறை தேட வேண்டிய நாளான நவம்பர் 4 ஆம் தேதி திங்கட்கிழமை மஹரிபிற்கு பிறகு தமிழகத்தில் எந்த பகுதியிலும் பிறை தென்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை.
எனவே மேகமூட்டமாக இருந்தால் அம்மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்ற நபி வழியின் அடிப்படையில் துல் ஹஜ் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து, நவம்பர் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மஹரிபிலிருந்து முஹர்ரம் மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
குறிப்பு :
இன்ஷா அல்லாஹ்....
வரக்கூடிய முஹர்ரம் 9 மற்றும் 10 ஆகிய பிறைகளில் ( நவம்பர் 14 வியாழக்கிழமை மற்றும் நவம்பர் 15 வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் ) நோன்பு நோற்பது நபி வழியாகும்.
நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1977
தகவல் : M. அப்துர் ரஹ்மான்
தகவலுக்கு நன்றி.
ReplyDelete