.

Pages

Tuesday, November 12, 2013

ஆஷுரா நோன்பு குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் அறிவிப்பு !


பிறை தேட வேண்டிய நாளான நவம்பர் 4 ஆம் தேதி திங்கட்கிழமை மஹரிபிற்கு பிறகு தமிழகத்தில் எந்த பகுதியிலும் பிறை தென்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை.

எனவே மேகமூட்டமாக இருந்தால் அம்மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்ற நபி வழியின் அடிப்படையில் துல் ஹஜ் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து, நவம்பர் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மஹரிபிலிருந்து முஹர்ரம் மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

குறிப்பு : 
இன்ஷா அல்லாஹ்....
வரக்கூடிய முஹர்ரம் 9 மற்றும் 10 ஆகிய பிறைகளில் ( நவம்பர் 14 வியாழக்கிழமை மற்றும் நவம்பர் 15 வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் ) நோன்பு நோற்பது நபி வழியாகும்.

நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1977

தகவல் : M. அப்துர் ரஹ்மான்

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.