.

Pages

Tuesday, November 12, 2013

முன்னாள் மத்திய அமைச்சர் அதிரை ஜாவியா மஜ்லீசில் பங்கேற்பு !

அதிரை ஜாவியாவில் பல ஆண்டுகளை கடந்து சிறப்பாக ஓதப்பட்டு வரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் கடந்த 06-10-2013 அன்று முதல் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் 17-11-2013 ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற உள்ளது.

இன்று நடைபெற்ற மஜ்லீசில் முன்னாள் மத்திய அமைச்சர் C.A. இப்ராஹீம் அவர்கள் கர்நாடாக மாநிலத்திலிருந்து வருகை தந்து கலந்துகொண்டார். இதில் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் முஹம்மது குட்டி ஆலிம் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிறப்பு துஆ ஓதப்பட்டன.

முன்னதாக இன்றைய மஜ்லீசில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சரை ஜாவியா நிர்வாக கமிட்டி செயலர் M.B அபூ பக்கர், பொருளாளர் சேக் அலி உள்ளிட்ட இதர நிர்வாகிகள் அனைவரும் அன்புடன் வரவேற்றனர்.

வருகை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் C.A. இப்ராஹீம் அவர்களிடம் அதிரை நியூஸ் சார்பாக கருத்து கேட்கப்பட்டது...
'பல ஆண்டுகளாக அதிரையில் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த புனித மிக்க மஜ்லிசில் தொலைதூரத்திலிருந்து வருகை தந்து கலந்து கொண்டதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். இந்த மஜ்லீசால் இந்த ஊர் மற்றும் இந்த ஊரைச்சுற்றியுள்ள பகுதிகள் மிகுந்த சிறப்பைபெறும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு வருடமும் நடைபெற உள்ள இந்த மஜ்லீசில் நான் தொடர்ந்து கலந்து கொள்ள இறைவன் நல்அருள் புரிய வேண்டும். இந்த மஜ்லிசை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி வரும் நிர்வாகத்தினருக்கும், சிறந்த சொற்பொழிவுகளை வழங்கிவரும் ஆலிம் பெருமக்களுக்கும், கலந்துகொண்டு சிறப்பிக்கும் இந்த ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் இறைவன் ரஹ்மத்தையும், பரக்கத்தையும் வழங்க வேண்டும் என துவா செய்கிறேன்' எனக் கூறினார்.

5 comments:

  1. எந்த நேரமும் திக்ரில் திளைத்திருக்கும் நாவு சொர்கவாதியின் அடையாளம் [திக்ர் மஞ்ளிஸ் சிறப்பாக ஜாவியாளில் தினமும் நடைபெற பிரார்த்திப்போமாக]

    ReplyDelete
  2. Ethi adirai kku kedaiththa mapearum pokkesam.

    ReplyDelete
  3. எந்த நேரமும் திக்ரில் திளைத்திருக்கும் நாவு சொர்கவாதியின் அடையாளம்

    ReplyDelete
  4. ஜாவியாவில் தினமும் திக்கிர் சிறப்பாக நடைப் பெற்றுக் கொண்டு இருக்கின்றது. ஆன்மீக ஆர்வம் உள்ளவர்கள் கலந்துக் கொள்கிறார்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.