.

Pages

Saturday, November 16, 2013

அதிரையில் வேகமாக பரவி வரும் சீசன் காய்ச்சல் !

அதிரையில் கடந்த சில நாட்களாக இரவில் கடும் பனிப் பொழிவும், பகலில் குளிர்ந்த காற்றும் வீசி வருகின்றன. திடிரென ஏற்பட்ட இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தால் வைரஸ், பாக்டீரியா வேகமாக பரவி தாக்குகின்றன. ஆரம்ப அறிகுறியாக ஜலதோஷமும் அதனைத்தொடர்ந்து காய்ச்சலும் ஏற்படுகின்றன. குறிப்பாக அதிகமான குழந்தைகள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிரையில் உள்ள அனைத்து மருத்துவமனையிலும் வழக்கமாக வரும் கூட்டத்தை வீட சற்று கூடுதலாக காணப்படுகின்றன.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு திடீரென உடல் நடுக்கம், தலைவலி, வாந்தி, உடல் அசதி, மயக்கம் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை மற்றும் தனியார் கிளினிக்குகளை நோக்கி படையெடுப்பதால் கூட்டம் அலைமோதுகிறது.

இதுகுறித்து மருத்துவத்தோடு தொடர்புடையவர்கள் கூறுகையில்...
'இந்த காய்ச்சல் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் ஏற்படுகின்ற வழக்கமான ஒன்று என்றும், பயப்பட தேவையில்லை. தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால் விரைவில் குணமாகிவிடும்' என்கின்றனர்.

1 comment:

  1. இது போன்ற காய்ச்சல் யாருக்கும் பரவாமல் இருக்க அல்லாஹு இடம் துவா செய்ய்வோமாக.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.