இதற்காக புதிய வடிவமைப்புடன் குப்பை தொட்டிகள் தயாரிக்ககப்பட்டு நகரில் முக்கிய பகுதிகளில் வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ரூபாய் 8000 செலவாகும் இவ்வகை குப்பை தொட்டிகளை தயாரிக்க அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள், அதிரை நகர தொழில் அதிபரிடம் பேரூராட்சிக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு இணங்க எவர்கோல்ட் வணிக வளாகத்தின் உரிமையாளர் செல்வம் அவர்கள் 5 குப்பைதொட்டிகளுக்கு பொறுப்பேற்றுக்கொண்டார்.
தயாரான முதல் குப்பைத்தொட்டியை கடற்கரைத்தெருவில் உள்ள பிராதான இடத்தில வைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த தொட்டிகள் நகரில் முக்கிய பகுதிகளில் வைப்பதற்கு உத்தேசித்துள்ளனர்.
கையாள்வதற்காக இலகுவான முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த தொட்டியை பற்றாக்குறையாக இருக்கிற மற்ற பகுதிகளிலும் வைப்பதற்கு அதிரை செல்வந்தர்கள் உதவ முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளும் அதிரை பேரூராட்சித்தலைவர் சார்பாக விடப்பட்டுள்ளது.
Well Done
ReplyDeleteபாராட்டப் படவேண்டிய நல்லதொரு முயற்சி.
ReplyDeleteஇத்திட்டம் நமதூரின் அனைத்துப் பகுதிகளுக்கும் முழுமையாக வெற்றிபெற வேண்டும்.
///எவர்கோல்ட் வணிக வளாகத்தின் உரிமையாளர் செல்வம் அவர்கள் 5 குப்பைதொட்டிகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டார்.///
இத்திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் விதமாக பொதுநல நன்னோக்குடன் உதவ முன்வந்த தொழில் அதிபருக்கும். வாழ்த்துக்கள்.
அஸ்ஸலாமு அழைக்கும்
ReplyDeleteநல்ல முயற்சி பாராட்டுகள் .
தரை மட்டதில் இருந்து அரை அடிக்கு மேல் கால் மாடலில் செயதால் துரு பிடிக்காமல் இருக்கு மல்லவா கொஞ்சம் யோசிக்கும் படி கேட்டு கொள்கின்ரேன்.
இந்த மாடல் பயன் பாட்டிற்கு இலகுவாக உள்ளதா என்று பார்து பின்பு மீதம் உள்ள தேவை களுக்கு செய்வது நலம் .
நல்லதோர் முன்னேற்றம் வாழ்க நலமுடன் மக்கள்.
ReplyDelete