.

Pages

Wednesday, November 20, 2013

அதிரை பேரூராட்சியின் முக்கிய அறிவிப்பு !

அதிரை பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 1 முதல் 21 வார்டுகளில் ஆடு மற்றும் மாடுகள் அலைந்து திரிகின்றன. இதனால் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கப்பட்டு இறந்து வருகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி ஆபத்து ஏற்படுகிறது. எனவே [ 21-11-2013 ] வியாழக்கிழமை முதல் கால்நடைகளின் உரிமையாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து வளர்க்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஆடு மாடுகளை பிடித்து பேரூராட்சி கட்டுப்பாட்டில் வைத்து பொது ஏலம் விடப்படும் என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது.

இங்ஙனம்,
செயல்அலுவலர்,
அதிரை பேரூராட்சி

8 comments:

  1. நாய்கள் அலைஞ்சா என்ன பண்ணுவீர்கள்?

    ReplyDelete
  2. வாசகர்களிடமிருந்து எனக்கு ஒரு உதவி தேவை:

    RTI யின் கீழ் தகவல்கள் பெற்றுத் தர இயலுமா?

    1. அதிராம்பட்டினம் செயல் அலுவலரின் கல்வித் தகுதி
    2. கால்நடைகளால் வாகன ஓட்டிகளுக்கு கடந்த ஒரு வருடத்தில் - நவம்பர் 2013 முதல் இன்றைய தேதி வரை ஏற்பட்ட விபத்துக்களின் எண்ணிக்கை, அதன் தன்மை
    3. ஒன்று முதல் 21 வார்டு வரை அதிராம்பட்டினத்தில் உள்ள மொத்த ஆடு, மாடு மற்றும் இதர கால்நடைகளின் எண்ணிக்கை (தனித்தனியாக)
    4. கோமாரி நோயால் அதிரையில் இதுவரை எத்தனை கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன, எத்தனை இறந்துள்ளன. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    குறிப்பு: மேலுள்ள செய்திதான் பிழையாக பதியப்பட்டது, செயல் அலுவலர் தந்த தகவல் வேறு என்றால் point no 1 நீக்கிவிடவும்.

    தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வினவுவதற்கு காரணம் சொல்ல வேண்டியதில்லை.

    நானும் சும்மா தெரிஞ்சுக்கத்தான் கேக்கறன். ஏன்னா கேக்குறவன் கேனயன்னா கேள்வரகுல ஆலிவ் எண்ணெய் எடுப்பாங்களாம்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. >>நவம்பர் 2013 முதல்<<
      நவம்பர் 2012 முதல்

      Delete
  3. அன்புள்ள பேரூராட்சி ஆபிஜருக்கு,

    ஏன் சாரூ,

    நம்ம கலெக்டரு அய்யா கோமாதாவை தாக்கும் கோமாரி நோய்க்கு தடுப்பு ஊசி தானே குத்த சொன்னாரு. அதுவும் கால்நடை டொக்ட்ர் மூலாமா. உங்களை எப்பங்கண்ணா ஏலம்மிட சொன்னாரு !?

    ஏனிந்த வேண்டாத வேலை !?

    இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன்...
    மகிழங்கோட்டை, எரிபுறக்கரை, தொக்காளிக்காடு, நடுவிக்காடு ஆகிய ஊர்களிலிருந்து நம்மூருக்கு வரும் மாடுகளையுமா ஏலம் விடுவிங்க !?

    ReplyDelete
  4. வீட்டில் மாடு வளர்த்து தரமான, ஒரிஜினல் பால் குடிப்பவர்கள் நமதூரில் யாருமே இல்லை எனலாம்.

    இதில் சூழ்ச்சி ஏதும் இருக்குமோ என்று கூட எண்ண வேண்டியுள்ளது.

    'நமதூரில் விநியோகிப்படும் பால்கள் தரமானவையா, ஒரிஜினலா என்று பேருராட்சி சார்பில் எந்த நாளாவது சோதனை செய்திருக்கிறார்களா?'

    இதையும் ஆர்டிஐல கேட்டு சொல்லங்கண்ணா.

    ReplyDelete
  5. ஆடு, மாடுகளை நமக்கு தொந்திரவு என்றால் அதற்காக ஒதுக்கப்பட்ட அரசு தொட்டியில் விடுவது வழக்கம். அங்கும் அதற்கு உணவிடவேண்டும்.

    இப்பொழுது வாழும் குடிமக்களின் உடமைப் பொருள்களை இச்சூழலில் இவ்வாறு ஏலம் விட அரசு அனுமதியோ என்ற
    புதிய சட்டம் உள்ளதோ ?

    அறியத்தான் ஆசை.

    ReplyDelete
  6. Allamea a. B. C. D. Yathan erukku.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.