.

Pages

Wednesday, November 13, 2013

அதிரை வாலிபர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார் !


அதிரை சிஎம்பி லேன் கள்ளுக்கொல்லை பகுதியை சேர்ந்த செய்யது உதுமான் அவர்களின் மகன் பைசல் அஹமது [ வயது 29 ]. இவர் சொந்தமாக கோழிப்பண்ணை தொழிலை நடத்தி வருகிறார். 

நேற்று இரவு வண்டிப்பேட்டை அருகே அடையாளம் தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். தலையில் காயமடைந்த இவர் அதிரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பைசல் அஹமது சம்பவம் குறித்து நம்மிடம் கூறியதாவது...
நேற்று சுமார் 9 மணியளவில் நடுத்தெருவின் பிராதான சாலையில் தான் நின்றுகொண்டு இருந்தபோது எதிரே இரு சக்கர வாகனங்களில் படு வேகமாக வந்த இரு வாலிபர்களை பொதுமக்கள் அதிமாக புழங்கும் இப்பகுதியில் படுவேகமாக செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறினேன். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் தகாத வார்த்தைகளில் என்னை திட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

இதை அடுத்து வண்டிப்பேட்டை அருகே சென்றுகொண்டிருந்தேன். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் என்னை தாக்கினார்கள் அதில் ஒரு வாலிபர் என்னை கட்டையால் தலையில் தாக்கினார். இதில் காயமடைந்த நான் அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். தாக்கியது தொடர்பாக அதிரை காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்துள்ளேன் என்றார்.

மேலும் தென்னை தோப்பு பராமரிப்பு செலவுக்காக தனது சட்டைப்பையில் வைத்திருந்த 40,000 ம் பணத்தையும் பறித்துச் சென்றுவிட்டனர் என வேதனையுடன் குறிப்பிட்டார்.

6 comments:

  1. பைக்கிள் வேகமாக செல்லும் ஹாரத்துக்களை தக்க முறையில் தடுக்க வேண்டும் மேலும் அதிரையில் வன்முறையை கையாளும் இளைங்கர்களை சந்தித்து அவர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்க வேண்டும் மீறுபவர்களுக்கு அந்த தெருக்களின் சங்கமோ, இயக்கமோ எச்சரிக்கை கொடுக்க வேண்டும் மீறி சிணிமாவின் தாக்கத்தால் ஹீரோயிசம் செய்ய நினைக்கும் இளைங்கர்களுக்கு கடைசியில் சட்டம்தான் தன் கடமையை செய்ய வேண்டும். ஓவ்வொரு முகல்லாவிலும் பெரியவர்கள் அல்லது இயக்கத்தவர்கள் இந்த அதி வேக ரோமியாக்களை நன்கு கவனித்தால் சரியாக இருக்கும்.

    ReplyDelete
  2. காவல் துறை சீக்கிரம் அந்த மர்ம நபர்ககளை கண்டு பிடித்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும்.என்பது என்னுடைய தாழ்மையான கோரிக்கை.

    ReplyDelete
  3. காவல் துறை சீக்கிரம் அந்த மர்ம நபர்ககளை கண்டு பிடித்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும்.என்பது என்னுடைய தாழ்மையான கோரிக்கை.

    ReplyDelete
  4. தம்பி பைசல் அஹமதுவைத் தாக்கியவர்கள் யாராக இருந்தாலும் அது கண்டிக்கதக்க விசயம்..... அல்லாஹ் உங்களுக்கு பொருமையையும், பூரன சுகத்தையும் அல்லாஹ் தருவானாக...ஆமீன்...
    பொதுவாகவே நீங்கள் தேவையில்லாப்பிரச்சினையில் ஈடுபடுவது, பல முறை.VKM ஸ்Tஓறே வாய்க்காலில் அமர்ந்து நம் ஊர் பெரிய மனுசங்களை தகாத வார்த்தைகளால் திட்டுவது, அதிகமாக மாற்றுமத்தினரோடவே தங்களின் நேரத்தைப்போக்குவது, தொழுகையின் பக்கமும் அல்லாஹ்வின் பக்கமும் நாட்டம் இல்லாமல் இருப்பது, அதிகமாக மாற்று மத சகோதர்கள் பேசுவது போல் , கெட்ட வார்த்தைகள் பேசுவதை இனியாவது தவிர்த்துக் கொன்டு அல்லாஹ்விக்கு அஞ்சி, அல்லாஹ்வின் பக்கம் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்... அல்லாஹ் உங்களை பாதுகாப்பானாக ஆமீன்

    ReplyDelete
  5. அல்லாஹ்விக்கு அஞ்சி, அல்லாஹ்வின் பக்கம் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்... அல்லாஹ் உங்களை பாதுகாப்பானாக ஆமீன்

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அழைக்கும்
    கொட்டிய குருதியை மீண்டும் பெற்றிடலாம் ஆனால் நீங்கள் கூறிய வார்தைகள் என்னவோதெரியவில்லை அப்படியன்னே உங்கள் மண்டையை உடைத்து சட்டையை கிழித்து பையிலுள்ள பணத்தை பறித்த அந்த கயவர் கொலைவெறி கூட்டம் எங்கே செல்லப்போகிரார்கள் காவல்துறை கைது செய்தபிறகு அவர்கள் வாக்குமூலம் என்னவென்று சற்று பொறுத்திருந்து பாப்போம்?
    இந்த குற்றத்தை யார்? செய்தாலும் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது இன்ஷால்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் நீங்கள் வெகுவிரைவாக பூரண குணமடைய பிராத்திக்கிறேன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.