.

Pages

Tuesday, November 5, 2013

அதிரையில் அதிசயம் ! ஒரு கிலோ கோழிக்கறி ரூபாய் 90 க்கு விற்பனை !!

அதிரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ 160 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பிராய்லர் கோழி இறைச்சி இன்று அதிசயமாக 90 க்கு விற்பனை செய்யப்படுகின்றன. மேலத்தெருவில் குட்டி மாமா கடை அருகில் அமைந்துள்ள நசுருதீன் கோழிக் கடையில் விலை மலிவாக கிடைக்கும் கோழி இறைச்சியை வாங்குவதற்காக கூட்டம் அலைமோதி வருகின்றன.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் 'சின்னவன்' என்கிற சேக் நசுருதீனிடம் விசாரித்த வகையில்...
"அதிரையில் உள்ள மற்ற கடைகளில் ஒரு கிலோ கோழி இறைச்சி ரூபாய் 160 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எங்களின் வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் நோக்கில் குறைந்த லாபம் அதிக விற்பனை என்ற நோக்கில் முயற்சித்து வருகின்றோம். மேலும் நாங்கள் கோழிப்பண்ணைகளுக்கு நேரடியாக சென்று கொள்முதல் செய்து வருவதால் பொதுமக்களுக்கு எங்களால் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிகின்றது.

இன்று துவங்கிய விற்பனையில் நமதூர் பொதுமக்கள் பல்வேறு தெருக்களிலிருந்து வருகை தந்து கோழி இறைச்சியை வாங்கிச் செல்கின்றனர். மேலும் ஆரோக்கியமான கோழிகளை கொள்முதல் செய்து அவற்றை காற்றோட்டமான இடத்தில பாதுகாத்து ஹலாலான முறையில் சுத்தப்படுத்தி விற்பனை செய்கின்றோம்." என்கிறார்.

டெலிபோனில் ஆர்டர் செய்தால் இலவச டோர் டெலிவரி வசதியும் செய்து கொடுக்கின்றனர். நாமும் நமது பங்குக்கு ஒரு கிலோ கோழி இறைச்சியை ஆர்டர் செய்துவிட்டு, அந்த இளைஞரின் தொழில் ஆர்வத்தை பாராட்டிவிட்டு அங்கிருந்து விடைபெற்றோம்.

தொடர்புக்கு : 9965240616

8 comments:

  1. நீங்க நல்லா வருவிங்க நான் சொல்லுறேன்.

    ReplyDelete
  2. என்ன ..கோழிக்கறி கிலோ 90 ரூபாயா..??? நம்ம ஊர்லயா..??? ஆச்சரியமா இருக்கே..???

    ReplyDelete
    Replies

    1. இதில் என்ன அட்சரியேம் காக்கா. கோழி தானே

      Delete
  3. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும். யாரோ விசமி என் பெயரை உபயோகித்து என் தொடருபுள்ள அனைவருக்கும் பேஸ் புத்தகத்திலும், யாஹூ ஈ மெயிலிலும் நான் பிலிப்பைன்சிலிருப்பதாகவும், அவசரமாக பணம் வேண்டிய இக்கட்டில் இருப்பதாகவும் தொடர்ந்து அனுப்பி இருக்கிறான்(ள்).கவணம் நான் அமெரிக்காவில் அல்லாஹ்வின் உதவியில் நல்ல முறையில் இருக்கிறேன்.

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும். யாரோ விசமி என் பெயரை உபயோகித்து என் தொடருபுள்ள அனைவருக்கும் பேஸ் புத்தகத்திலும், யாஹூ ஈ மெயிலிலும் நான் பிலிப்பைன்சிலிருப்பதாகவும், அவசரமாக பணம் வேண்டிய இக்கட்டில் இருப்பதாகவும் தொடர்ந்து அனுப்பி இருக்கிறான்(ள்).கவணம் நான் அமெரிக்காவில் அல்லாஹ்வின் உதவியில் நல்ல முறையில் இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சண்டாளர்களா விளையாட்டிற்கு ஒரு அளவே இல்லையா

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.