.

Pages

Saturday, November 9, 2013

அதிரையில் PFI நடத்திய விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் !

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி மாரத்தான், உடற்பயிற்சி வகுப்புகள், ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், அரசு மருத்துவமனைகளை தூய்மைப்படுத்துதல் போன்ற பல்வேறு நலப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ஆரோக்கியம் குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் விழிப்புணர்வு பிரச்சார மினி மாரத்தான் ஓட்டம் இன்று மாலை 5 மணியளவில் தக்வா பள்ளியின் பிராதான சாலையிலிருந்து துவங்கியது.

இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் இந்தியா அமைப்பின் தஞ்சை [ தெற்கு ] மாவட்ட தலைவர் அபூபக்கர் சித்திக் சிறப்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட SDPI தஞ்சை [ தெற்கு ] மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த ஓட்டம் பெரிய ஜும்மா பள்ளி, மரைக்கா பள்ளி, செக்கடி மேடு, புதுமனைத்தெரு, சிஎம்பி லேன், வண்டிபேட்டை, சேர்மன்வாடி வழியாக சென்று பேருந்து நிலையத்தை அடைந்தது.

முன்னதாக PFI அதிரை நகரத் தலைவர் அஹமது சலீம் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.






1 comment:

  1. ஆரோக்கியமான முயற்சி வாழ்த்துக்கள் PFI.

    பரிசுகள் ஒன்றும் அறிவிக்க வில்லை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.