.

Pages

Friday, March 1, 2013

மல்லிப்பட்டினத்தில் வலையில் சிக்கியது ஓரக்கத்தாளை !

மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்றுமுன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற விசைப்படகு மீனவர்கள் வலையில் ஓரக்கத்தாளை எனும் அதிசய மீன்கள் சிக்கியது. மொத்தம் 202 மீன்கள் சிக்கி இருந்தது.

ஒரு மீன் 20 முதல் 30 கிலோ வரை எடைகொண்டதாகும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய இவ்வகை மீன்கள் வியாபாரிகளிடம் மொத்தமாக ரூ.60 லட்சத் திற்கு விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து மல்லிப்பட்டினம் முகம்மது யூசுப் கூறுகையில்,
'இவ்வகை மீன்களில் உள்ள நெட்டி என்ற உறுப்பு மருத்துவ குணம் உடையது. இவ்வகை மீன்கள் 30 ஆண்டுகளுக்கு முன் இத்துறைமுகத்தில் 7 சிக்கியது. தற்போது 202 மீன்கள் சிக்கியுள்ளது. இவை ஒவ்வொன்றும் 20 முதல் 30 கிலோ வரை எடை உள்ளது. இதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய் வதற்காக வியாபாரிகள் ரூ.60 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளனர்' என்றார்.

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் மீனவர்கள் வலையில் சிக்கிய அதிசய ஓரக்கத்தாளை மீன்களை ரூ.60 லட்சத்துக்கு வாங்கிய வியாபாரிகள் அதை லோடு ஆட்டோவில் ஏற்றிச்சென்றனர்.

நன்றி : செல்வகுமார்
ரிப்போர்ட்டர் - தினகரன்

10 comments:

  1. 60 லட்சமா ஆச்சரியப்படக்கூடிய செய்திதான்.
    பதிந்து அறிந்தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    ஓரக்கத்தாளை, நான் இப்போதுதான் கேள்விப் படுகிறேன். ஆச்சரியமான செய்தி என்றாலும் அதை புகைப்படங்கள் எடுத்து செய்தியா தருவது ஒரு படி மேலே.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. Total price of fish - 60,00,000
    Total fish - 202 fish
    The average weight of a fish - 30 kg
    The price of a fish - INR 29702
    A kilo of fish - 990 INR
    How is this possible ......

    ReplyDelete
  4. ஒரு வேலை அபூர்வ மீனுங்கிறாதாலே விலை ஜாஸ்தியா ஈக்கிமோ !? :)

    ReplyDelete
  5. இந்த மீனுக்கு ஏன் இவ்வளவு விலை என்றால் இதன் நெட்டி என்று ஒருபகுதி உண்டு அந்த நெட்டி மருத்துவ குணத்துக்கு பயன் படுக்கிறது அல்லாஹு சுபஹானதால மதினருக்கு மருத்துவம் குணம் அடைய எங்கேயெல்லாம் மருந்து வைத்துள்ளான்.

    ReplyDelete
  6. இந்த அரியவகை மீன்கள் குஜராதில்லும் நம் சகோதரர் (ஜாவித்) ஒருவரை ஒரே நாளில் கோடிஸ்வராக ஆக்கிவுள்ளது, மாஷா அல்லாஹ்!

    ReplyDelete
  7. இவ்ளோவ் வெல கொடுத்து வாங்கி இந்த மீனை சாப்புட்றத்துக்கே மனசு வராதேங்க....அதனால காலமெல்லாம் ஐஸ்பொட்டியிலேயே வச்சி அழகு பாக்க வேண்டியது தான் போல.......

    ReplyDelete
  8. //இவ்ளோவ் வெல கொடுத்து வாங்கி இந்த மீனை சாப்புட்றத்துக்கே மனசு வராதேங்க....// சாப்பிடுறதுலேயே இரு நெய்னா..

    இது மருத்துவ குணம் இதுலே உள்ளதுனு சொல்லிருக்கே அதை பாருப்பா...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.