.

Pages

Saturday, March 30, 2013

திருத்துறைப்பூண்டி–அதிரை-பட்டுக்கோட்டை–காரைக்குடி ரெயில் பாதை திட்டப்பணிகள் குறித்து டி.ஆர்.பாலு ஆய்வு !

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் திருவாரூர்–திருத்துறைப்பூண்டி–திருக்குவளை, நாகை–திருத்துப்பூண்டி–பட்டுக்கோட்டை–காரைக்குடி, மன்னார்குடி–பட்டுக்கோட்டை, தஞ்சை–ஒரத்தநாடு–பட்டுக்கோட்டை ஆகிய புதிய ரெயில் பாதை கட்டுமான பணிகள் குறித்த ரெயில்வே நிலைக்குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. ஆய்வு நடத்தினார்.

அப்போது தென்னவன்நாடு பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், தங்கள் கிராமத்தின் நடுவே அமைக்கப்படவிருக்கும் ரெயில்வே வழித்தட பணிகளால் நூற்றுக்கணக்கான தனியார் கட்டிடங்களும், பொது சொத்துக்களும் சேதம் அடையும் என்பதால் மாற்று வழியாக இந்த திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட டி.ஆர்.பாலு, அங்கிருந்த அதிகாரிகளை உடனே தென்னவன்நாடு பகுதிக்கு சென்று ரெயில் திட்டத்தின் உத்தேச வரைவினை மாற்றுவதற்குரிய ஏற்பாடுகளை செய்ய முடியுமா? என்பதை அப்பகுதி மக்களிடம் கலந்து பேசி உரிய முடிவை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

அதன்படி அதிகாரிகளும் கிராமமக்களுடன் கலந்து பேசி சரியான வழித்தடத்தை தேர்ந்தெடுத்தனர். ரெயில்வே தடத்தின் இறுதி வரைவு வடிவம் உருவாக்கிட ரெயில்வே துறை சம்மதித்துள்ளது. இதேபோல் பட்டுக்கோட்டை அருகே உள்ள கிறிஸ்தவ ஆலயம் அகற்றப்படாமல் இருக்க ரெயில்வே துறையின் திட்ட வரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று பட்டுக்கோட்டை நல்லெண்ண அசம்பிளி ஆப் கார்ட் சபையை சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் ஜேக்கப்செல்வராஜ் தலைமையில் கிறிஸ்தவர்கள் கோரிக்கை வைத்தனர். அதை பரிசீலித்து உரிய முடிவு மேற்கொள்வதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியின்போது ரெயில்வே துறையின் மூத்த அதிகாரிகளும், ஒரத்தநாடு மற்றும் தென்னவன்நாடு பகுதியைச் சேர்ந்த காந்தி, வடிவேல், ராம்குமார், வெங்கடேஸ்வரன், இளங்கோவன், ராகவன், பாலகணேசன், சுகுமாறன், குமார், கலியபெருமாள், ஆடிட்டர் ராமையன், ரெங்கராஜ், முருகேசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தர்மலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை ரெயில்வே நிலைக்குழு தலைவர் டி.ஆர்.பாலுவிடம் அளித்தனர்.

நன்றி : தினத்தந்தி

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.