.

Pages

Sunday, March 17, 2013

செக்கடி குளம் அருகே அதிரை பேரூராட்சியின் அறிவிப்பு பலகை !

அதிரை பேரூராட்சி சார்பாக செக்கடி குளம் அருகே இன்று [ 17-03-2013 ] காலை முதல் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் அதிரை பேரூராட்சி வார்டில் உள்ள செக்கடி குளம் அரசுக்கு சொந்தமானது என்றும், மேற்படி இடத்தில ஆக்கிரமிப்புகள் செய்யக்கூடாது என்றும், மீறினால் நில அபகரிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் என்றும், ஏற்கனவே கட்டி இருக்கக்கூடிய கட்டடங்களை முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த [ 16-02-2013 ] அன்று மாலை 5.30 மணியளவில் அதிரை செக்கடிபள்ளிக்கு உட்பட்ட குளத்துமேட்டில் இருக்கும் நிலம் தொடர்பாக RDO அவர்கள் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.


கடைசி செய்தி  : இந்த இடத்தில் வைக்கப்பட்டு இருந்த அதிரை பேரூராட்சியின் அறிவிப்பு பலகை தற்போது அகற்றப்பட்டுள்ளது.

5 comments:

  1. இறைவன் பாதுகாப்பானாக

    ReplyDelete
  2. என்ன செக்கடி குளம் அரசுக்கு சொந்தமானத? நம்ப முடியவில்லை.

    ReplyDelete
  3. சகோ ஹபீப் உங்களுக்கு மட்டுமா எங்களுக்கும் தான் நம்பவே முடியலே ஊருலே என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே புரியலே யாரு மனதில் என்ன என்று அல்லாஹ் நன்கு அறிவான்

    அல்லாஹ்வை அஞ்சி கொள்வோம்

    ReplyDelete
  4. இத்தனைகாலமாக இது அரசுக்கு சொந்தமென அறியாமல் இப்போது எப்படி அறிந்து கொண்டனராம்.அதைப்பற்றிய விபரம் அறியப்படுத்தி அறிவிப்பு பலகை எழுதி இருக்கலாமே..!

    எல்லாம் அல்லாஹ் ஒருவனே அறிவான்.

    ReplyDelete
  5. இத்தனைகாலமாக இது அரசுக்கு சொந்தமென அறியாமல் இப்போது எப்படி அறிந்து கொண்டனராம்.அதைப்பற்றிய விபரம் அறியப்படுத்தி அறிவிப்பு பலகை எழுதி இருக்கலாமே..!

    எல்லாம் அல்லாஹ் ஒருவனே அறிவான்
    ________________________________________
    J.M MOHAMED NIZAMUDEEN
    S/O K.M.A JAMAL MOHAMED,
    www.nplanners.webs.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.