பள்ளிவாசல்கள், தர்காக்கள், மத்ரசாக்கள் போன்ற வக்ஃப் நிறுவனங்களின் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு மற்றும் மறு கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதற்காக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையிலான அரசு, 'வக்ஃப் நிறுவன மேம்பாட்டு நிதி' ஏற்படுத்தி 2012-2013ஆம் ஆண்டுக்கு நலிந்த வக்ஃப் நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக மூன்று கோடி ரூபாய் ஒப்பளிப்பு ஒதுக்கீடு செய்துள்ளது.
இதற்காக 5.3.2013 அன்று நடைபெற்ற வக்ஃப் வாரிய கூட்டத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் திரு.அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வாரிய உறுப்பினர்கள் ஜனாப். S. அப்துல் ரஹீம், MLA. ஜனாப். SA. பாரூக், ஜனாப். M.K. .கான், ஜனாபா.AS. பீ பீ ஜான், ஜனாப்.சலாவுதீன் முஹம்மது அயூப் மற்றும் ஜனாப். குலாம் முஹம்மது மெஹ்தி கான் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிதி குறித்து வாரியத் தலைவர் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வக்ஃப் நிறுவன மேம்பாட்டு நிதிக்கு பொதுமக்கள் மற்றும் கொடையாளர்கள் அளிக்கும் நிதியுடன் இத்திட்டத்தை தமிழ்நாடு வக்ஃப் வாரியம் மூலமாக அரசு செயல்படுத்த உள்ளது. பொதுமக்கள் மற்றும் கொடையாளர்கள் அளிக்கும் நிதியைப் பெற்றுக் கொள்ள தமிழ் நாடு வக்ஃப் வாரிய முதன்மைச் செயல் அலுவலருக்கு (அரசாணை எண்.2 பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை நாள் 07.01.2013 மூலம்) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தலைமைச் செயலக கிளையில் தனியாக ஒரு சேமிப்புக் கணக்கு துவக்கப்பட்டுள்ளது. கொடையளிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் கொடையாளர்கள் 'TAMIL NADU WAKF INSTITUTIONS DEVELOPMENT FUND' என்ற பெயரில் கொடை தொகைக்கு சென்னை மாற்றத்தக்க வங்கி வரைவோலை எடுத்து
'முதன்மை செயல் அலுவலர்,
தமிழ்நாடு வக்ஃப் வாரியம்,
எண்.1. ஜாபர் சிராங் தெரு,
வள்ளல் சீதக்காதி நகர்,
சென்னை-600 001.'
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். உரிய பரிசீலனை மேற்கொள்ளப்பட்ட
பின்னர் கொடை தொகை, நிதி தேவையுள்ள வக்ஃப் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். மேலும் பெரும் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதித் தேவையுள்ள வக்ஃப் நிறுவனங்கள் உரிய திட்ட மதிப்பீடு, வரைபடம், புகைப்படம் போன்ற விபரங்களுடன் மேற்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வக்ஃப் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் இத்திட்டத்திற்கு தாராளமாக நிதி வழங்கிட இஸ்லாமிய செல்வந்தர்கள், பொதுமக்கள் மற்றும் கொடையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட செய்தியை தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் மாண்புமிகு அ.தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
தலைவர்,
தமிழ்நாடு வக்ஃப் வாரியம்,
சென்னை-1
அறிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள பதிவு.
ReplyDeleteஅறியத்தந்தமைக்கு நன்றி.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteநல்ல தகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை