.

Pages

Monday, March 25, 2013

இருதய சிகிச்சைக்கு அனுப்பிய பணம் அதிரை பைத்துல்மால் / தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளிடம் ஒப்படைப்பு !

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்புச்சகோதரர்களே,

கடந்த [ 13-02-2013 ] அன்று "இருதய சிகிச்சை : அதிரைச்சிறுமிக்கு உதவிடுவீர்" என்ற தலைப்பில் நமதூர் வலைதளங்கள் மூலம் உதவி கோரப்பட்டது. இருதய சிகிச்சைக்குரிய உதவிகள் நேரடியாக செல்லும் வகையில் சகோ. S.A. அப்துல் மஜீத் அவர்களின் தொடர்பு எண்ணும், வங்கி விவரமும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வசிக்கும் ஒரு சில சகோதரர்கள் மூலம் வந்தடைந்த ரூபாய் 35,000/- மும், சகோ. S.A. அப்துல் மஜீத் அவர்கள் வசம் இருந்தன. இறைவனின் நாட்டம் மாற்றமாக அமைந்துவிட்டதால் இவற்றை குழந்தையின் சிகிச்சைக்காக பயன்படுத்தும் சூழல் அமையவில்லை.
இதற்கிடையில் ஆஸ்திரேலியா நாட்டில் வசிக்கும் அதிரை சகோதரர் ஒருவர் தான் அனுப்பிருந்த ரூபாய் 10,000/- த்தை அதிரை தவ்ஹீத் பள்ளியின் கட்டுமானப்பணிக்காக கொடுத்துவிடும்படி சகோ. S.A. அப்துல் மஜீத் அவர்களிடம் அன்புடன் கேட்டுக்கொண்டதால், அந்தப்பணம் தவ்ஹீத் ஜமாத் பள்ளியின் நிர்வாகிகள் வசம் கடந்த [ 22-03-2013 ] அன்று ஒப்படைக்கப்பட்டது.

மீதமுள்ள ரூபாய் 25,000/-த்தை மருத்துவ உதவிக்கு மாத்திரம் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அதிரை பைத்துல்மால் வசம் இன்று [ 25-03-2013 ] ஒப்படைக்கப்பட்டது.


இந்தப்பணத்தை சிறுநீரகக் கோளாறால் உடல் நிலை பாதிப்படைந்திருக்கும் பழஞ்செட்டித்தெருவைச் சார்ந்த ஏழைச்சிறுவன் ஒருவனின் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்திக்கொள்ள அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் உத்தேசித்துள்ளனர் [ இன்ஷா அல்லாஹ் ]  விரைவில் இதுகுறித்த அறிவிப்பு தளத்தில் வெளியிடப்படும்.

உதவிகள் செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக !

அதிரை நியூஸ் குழு

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.