.

Pages

Sunday, March 31, 2013

துபையில் நடந்த அமீரக கீழத்தெரு மஹல்லா மாதாந்திரக்கூட்டம்.!










அமீரக துபையில் கீழத்தெரு மஹல்லாவின் மாதாந்திரக்கூட்டம் நேற்று முன் தினம் 29/03/2013 வெள்ளிக்கிழமை அன்று இஷா தொழுகைக்கு பின் நடைபெற்றது. கீழத்தெரு மஹல்லா தலைவர் ஜனாப் M.அப்துல் ஜலீல் அவர்கள் தலைமை ஏற்க சகோதரர் மீரான் ஹசனி கஹ்ராத் ஓத சிறப்புடன் ஆரம்பமானது.

நமது ஊர்,மற்றும் நமது மஹல்லா வாசிகள் நலன் கருதி நல்ல பல விசயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அதில் சில முக்கிய கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டன.

கூட்டத்தில் முன்வைத்து பேசப்பட்ட கோரிக்கைகளில்  முக்கியமானவைகள்.!


1, காட்டுப்பள்ளி அருகில் பெண்களுக்கென தனி சுகாதார வாளகம் [கழிப்பிடம்] கட்டியதை திறப்பதற்கான   முயற்ச்சி எடுப்பது பற்றி பேசப்பட்டன.

2, நமது தெருவாசிகளின் நலன் கருதி நமது தெருவுக்கென்று நுகர்பொருள் விநியோகத்திற்கான ரேசன் கடை அமைக்க தகுதியான இடம் விரைவில் பார்த்து அமைக்கப்படும்.

3, பெண்களுக்கென மார்க்க அறிவுரை சொற்ப்பொழிவுகள் நடத்த வசதியுடன் கூடியபொருத்தமான இடத்தை தேர்ந்தெடுத்து விரைவில் செயல்படுத்துவது பற்றி பேசப்பட்டன.

4, மிக முக்கியமாக கீழத்தெரு மஹல்லா வாசிகள் நமது தெரு மாத சந்தாவை சரியாக கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன. இன்னும் பல நல்ல திட்டங்களை நமது சார்பாக ஊருக்காகவும், நமது தெருக்காகவும் செய்து கொடுக்கலாம். அதில் அல்லாஹ் பரக்கத்தை வைத்திருக்கிறான்.

மற்றபல விசயங்கள் கலந்துரையாடலுக்குப்பின் சகோதரர் மீரான் ஹசனி துவா ஓத கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அமீரக கீழத்தெரு மஹல்லா தலைவர் நன்றி கூற, கூட்டம் இனிதாய் முடிவுற்றன.

இப்படிக்கு,  
அமீரக கீழத்தெரு முஹல்லா நிர்வாகிகள்

தொகுப்பு : அதிரை மெய்சா
thanks : adirai east

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி இதில் கலந்துக்கொண்ட கீழத்தெரு மஹல்லா வாசிகள் அனைவர்க்கும் எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.