அதிரை ஜாஃபர் இவரைப்பற்றி ஏற்கனவே அறிமுகம் தந்திருந்தாலும் தனது இனிய குரலால் அனைவரின் பார்வையையும் தனதுபக்கம் இழுத்து வருகின்றவர். இவரின் இனிய குரலை அதிரையின் அனைத்து கவிஞர்களும் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். இனிவரும் காலங்களில் அதிரையின் சாதனையாளர்களின் பட்டியலில் இவரின் பெயரும் இடம்பெறும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரையரின் தலை சிறந்த படைப்புகளை தொடர்ந்து வழங்கி வருகின்ற 'சமூக விழிப்புணர்வு பக்கங்கள்' என்ற வலைதளத்தில் கவிஞர் நபிதாஸ் அவர்கள் எழுதிய 'அம்மா' கவிதை பதியப்பட்டு அனைவரிடமும் சிறந்த பாராட்டுதலையும் வாழ்த்துகளையும் அதிக எண்ணிக்கையிலான பின்னூட்டங்கள் மூலம் பெற்றது.
கவியன்பன் கலாம் அவர்களின் கவிதை வரிகள் மூலம் குரல் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தாலும் முதன் முறையாக கவிஞர் நபிதாஸ் அவர்களின் பாடல் வரிக்கு குரல் கொடுத்துள்ளார்.
இனி நபிதாஸ் பற்றி சிறிய குறிப்பொன்றை காண்போம்...
நாம் எல்லோரையும் போல் மனித சமூகத்தன் மேம்பாட்டின் மேல் அக்கறைக் கொண்டவர். அதனை வெளிப்படுத்தும் விதமாக சமூக விழிப்புணர்வு பக்கங்களில் கவிதைகளும் கட்டுரைகளும் தொடரும் எழுதி வருகின்றார். தாய்மொழி தமிழில் பற்றுகொண்டவர் என்பதை இவர் கவிதைகள் பல எழுதினாலும் அவைகள் புதுக்கவிதை நடையில் எழுதினார். கவிதை முறைப்படி கற்று எழுத வேண்டும் என்ற ஆர்வம் உள்ள இவர், நம் வலைதளத்தில் கவிதைகளை எழுதிவரும் கவிக்குறள் கலாம் அவர்கள் எழுதும் கவிதைகள் போல எழுத ஆர்வம் கொண்டு இன்று மரபுக்கவிதை எழுதி வருகிறார். இணையத்தில் இலக்கணங்கள் கற்றாலும் ஆசான் ஒருவர் வழிகாட்டுதல் அவசியம். அதன்படி கவிக்குறள் அவர்களின் மனதில் இடம்பிடித்த இவர், கவிதீபத்தின் வழிகாட்டுதல்படி மரபுகள் பற்றிய விளக்கங்கள் அவர்களிடமே கற்றுவருகிறார்.
அதிரை ஜாஃபரின் இனிய குரலில் நபிதாஸின் பாடல் :
உன்னையே உருக்கி அம்மா
.....உலகிலே விட்டாய் எம்மை
தன்னிலே வரைந்த என்னை
.....தரணியில் தந்தாய்த் தன்னாய்.
சின்னதா ! செய்தேன் தப்பு
.....சிறிதென நடித்தாய்த் தப்ப
என்னையே கண்டாய்க் கனவு
.....என்றுமே நான்உன் நினைவு.
வனப்புகள் செய்தே நாளும்
.....வசதிகள் தந்தாள் கேளும்
சினத்தினால் உண்ணாக் கோபம்
.....சிணுங்கிதான் நிற்பாள் பாவம்.
மனதினில் பரிவைக் கோர்பாள்
.....மதியுடன் பசியைத் தீர்பாள்
தனக்கென வாழாத் தானம்
.....தந்ததில் வாழ்தேன் நானும்.
பிறப்புகள் எதுவும் உண்டா
.....பிறவியில் காண்ப துண்டா
பிறந்ததும் எனக்குத் தானோ !
.....பிறவியோ உனக்கு வீனோ ?
துறவறம் கொள்வார் பின்னால்
.....துறவியாய் வாழ்வாள் என்னால்
திறம்பட எதுவும் தந்தும்
.....தீர்த்திட முடியாப் பந்தம்.
என்முகம் சோகம் ஏற்காய்
.....இன்னலை அழித்தே தீர்பாய்
உன்முகம் என்னைத் தேடும்
.....உறங்கிட தாலாட்(டு) பாடும்.
அன்னையின் பாதம் நிற்கும்
.....அதன்கீழே மகனின் சொர்க்கம்
சொன்னவர் உலகின் கோமான்
.....சொல்வழி நடந்தால் சீமான்
கண்டதும் அதிகம் என்னை
.....கனவிலும் இழந்தாய் உன்னை
மண்ணிலே எதுவும் இல்லை
.....மனதிலும் நானே தொல்லை
ஆண்டவன் படைப்பில் காண்போம்
.....அதினிலே பொறுமை என்போம்
அண்ணலார் சொன்னார் நன்றே
..... அன்னையும் சிறப்பு என்றே !
நபிதாஸ்
ஆஹா அருமை.. அருமை..
ReplyDeleteதிரும்ப திரும்ப கேட்டேன்... இசையில்லாமல் அழகாய் அமைந்துள்ளது.
"அம்மா" பாடலை செவியுறும்போது மறைந்த பாடகர் சாகுல் ஹமிது அவர்களின் சிறந்த குரலை மீண்டும் கேட்பது போல் எனக்குள் ஓர் உணர்வு. இசையில்லாமல் இதுபோல அவர்கள் பாட இரசித்துள்ளேன்.
ReplyDeleteஅதிரையில் சிறந்த பாடகர் ஒருவர் உருவாகி வருகிறார்.
நபி தாஸ் அவர்களின் அம்மாவின் கவிவரிகளை மீண்டுமாய்க் கேட்கத்தூண்டும் அழகிய மென்குரலில் இசையில்லாமல் இனிமையாக பாடியுள்ளார் சகோதரர் ஜாஃபர் அவர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteAgka kudumpaththel eppadeyum peareya padakar eruppathu akamum....ullamum mahelkenrathu.
ReplyDelete