.

Pages

Thursday, November 7, 2013

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் மாணவர்கள் சாதனை !

கடந்த அக்டோபர் மாதம் 29, 30 தேதிகளில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற 56 ஆவது குடியரசு தின தடகள விளையாட்டு போட்டியில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 32 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

மேலும் தஞ்சை மாவட்ட அளவில்  மேல்நிலைப்பள்ளிக்கான கால்பந்து போட்டியிலும் இப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.

வெற்றிபெற்றவர்கள் விவரங்கள் வருமாறு :
600 மீட்டர் ஓட்டப்போட்டியில்
P. முத்து ராசு (8C) - முதல் இடம்
H. பயாஸ் அகமது (8 E) - இரண்டாம் இடம்

நீளம் தாண்டுதலில்
J .ஆதில் அகமது (8 E ) - முதலாம் இடம்

400 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில்
P . முத்து ராசு (8C)
J .ஆதில் அகமது (8 E )
I .ரிஜ்வான் அலி (8 E )
P .கார்த்திக் (8 E )
ஆகியோர் கூட்டாக முதலாம் இடம்

100, 200 மீட்டர் ஓட்டப்போட்டியில்
J .பவித்திரன் (10B) - இரண்டாம் இடம்

400 மீட்டர் ஓட்டப்போட்டியில்
A .சகாபுதீன் (10C) - இரண்டாம் இடம்

குண்டு எறிதலில்
A .முகம்மது யூசுப் (12 D ) - மூன்றாம் இடம்
பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.

வெற்றி பெற்று சாதனை நிகழ்த்தியுள்ள அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், ஏனைய முதுகலை மற்றும் இடைநிலை ஆசிரிய ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோருக்கு அதிரை நியூஸ் குழுவின் வாழ்த்துகளை அன்புடன் தெரிவிப்பதில் மகிழ்கின்றோம். இதே போல் தொடர்ந்து சாதனை படைக்க வாழ்த்துகின்றோம்.

8 comments:

  1. சாதனை படைத்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    மேலும் பல சாதனைகள் படைத்திட முயற்ச்சியுங்கள்.

    அதற்க்கு ஆசிரியர்களும் ,பெற்றோர்களும் ஊக்கமளிக்க வேண்டும்.

    ReplyDelete
  2. மிகவும் மகிழ்வாக இருக்கிறது.

    1968- 69 கல்வியாண்டில் நாங்கள் பதினோராம் வகுப்புப் படித்த போது நமது பள்ளி , பட்டுக் கோட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான காலை யில் நடந்த கால்பந்து இறுதிப் போட்டியில் வென்று , வெற்றிக் கோப்பையை பட்டுக் கோட்டையில் இருந்து கொண்டுவந்து சேர்மன் வாடியில் பஸ்ஸை விட்டு இறங்கி அங்கிருந்து கோப்பையுடன் பள்ளி நோக்கி ஓடிவந்தனர்.

    இந்த டீமுக்கு கேப்டன் புதுமனைத்தெரு ஜெயினுல் ஆபிதீன்.

    நினைவில் உள்ள மற்றவர்கள் கடல்கரைதெரு வா. மு. அஹமது ஹாஜா , தண்டையா என்கிற சிராஜுதீன், எஸ். எம். எஸ். பறக்கத், ( இப்போது சிமின்ட் வியாபாரம்) பறக்கத் அலி ( முன்னாள் AAMF பொருளாளர்) ஆகியோர். இவர்கள் ஊரில் இருக்கிறார்கள். இவர்களின் அன்றைய நினைவுகளை ஒரு பேட்டி எடுத்து வெளியிடுங்கள் தம்பி நிஜாம்.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    சாதனை படைத்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    மேலும் பல சாதனைகள் படைத்திட முயற்ச்சியுங்கள்.

    அதற்க்கு ஆசிரியர்களும் ,பெற்றோர்களும் ஊக்கமளிக்க வேண்டும்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  4. சாதனை படைத்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    மேலும் பல சாதனைகள் படைத்திட முயற்ச்சியுங்கள்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் சாதனை வீரர்களே மேலும் பல சாதனைகளை நீங்கள் படைத்தாகவேண்டும் தொடந்து முயர்ச்சி செய்து கொண்டுடே இருக்க வேண்டும். வெற்றி பெற்ற உங்கள் அனைவருக்கும் என் நல் வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு

    அதிரை அல்மாஸ்

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் சாதனை வீரர்களே மேலும் பல சாதனைகளை நீங்கள் படைத்தாகவேண்டும் தொடந்து முயர்ச்சி செய்து கொண்டுடே இருக்க வேண்டும். வெற்றி பெற்ற உங்கள் அனைவருக்கும் என் நல் வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு

    அதிரை அல்மாஸ்

    ReplyDelete
  7. சாதனை படைத்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    இன்னும் பல சாதனைகள் புரிந்து நமது பள்ளிக்கும் நமது ஊருக்கும் பெருமை சேர்க்க என் துவாவும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  8. இது போன்று விளையாட்டு வீரர்களை ஊக் விக்கும் அதிரை நியூஸ்க்கு நன்றியும் வாழ்த்துகளும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.